புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்

'தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்' என்ற நூல் நீண்டவாசிப்பும், உரையாடலின் பின்பாக வெளிவரும் பிரசவ-மாகும். ஏறக்குறைய 2001 முதல் 2005 வரையான காலப்பகுதியில் இந்நூலுக்கான தயார்ப்படுத்தலும் முதுமெய்யியல் மானிக்கான ஆய்வும் ஒரே சமகாலத்தில் நிகழ்ந்ததெனக் கூறலாம். முதுமெய்யியல் மானிக்கான ஆய்வில் தேடியவற்றை அப்படியே ஒப்புவிக்க முடி-யாத மட்டுப்பாட்டினால் எழுந்ததே இந்நூலாகும். மேலும் அக்கா-லப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை மாண-வர்களுக்கான தென்னாசிய அரசியல் பற்றிய கற்பித்தலை மேற்-கொள்ளும் சந்தர்ப்பம் பேராசிரியர் என். சண்முகலிங்கத்தினால் (தற்போதைய துணைவேந்தர்) எனக்கு வழங்கப்பட்டது. அதனை தெளிவாகப் புரிந்துகொண்ட நான் அவ்விரிவுரை வகுப்புக்களில் என்னிடம் கேள்விகளையும், அதற்கான தயார்ப்படுத்தலின் இயைபுத் தன்மையையும் ஒழுங்குபடுத்த உதவிய சமூகவியல் துறை மாண-வர்களின் பின்னூட்டல் இந்நூலின் உருவாக்கத்திற்கான இன்னோர் காரணமாகும். இதனைவிட தென்னாசியாவின் அரசியல் கொதி-நிலை தொடர்பாக என்னிடம் இயல்பாகக் காணப்படும் கருத்தியல் மாதிரியும் இதன் படைப்புக்கு வலிமை சேர்த்த காரணியாகக் கொள்ளலாம். இந்நூலினை 2005ஆம் ஆண்டுகளில் வெளியி-டுவதென தீர்மானித்த போதே என்னைத் திட்டமிட்டு பழிவாங்க முயன்ற நடவடிக்கை நிகழ்ந்தது. அதனால் இவ்வெளியீட்டை காலம் தாழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நூல் கோட்பாட்டு மாதிரிக்குள் நிகழும் நடைமுறை பலத்தையும், பலவீனத்தையும் சம அளவில் பரிசீலிக்க தளைப்-பட்டுள்ளது. தென்னாசிய அரசியலை முதன்மைப்படுத்தும் போது அதன் அடிப்படை அரசியல் சமூகத்துக


இரா.இளங்குமரன்
Illankumaran, Era

கடலொன்று கடல்கடக்கும் ஆயத்தங்கள்
கவின்அல்லூர் தனில்நிகழ்வ துண்மை யுண்மை;
மடைதிறந்த வெள்ளமதும் பின்னை ஓடும்
மாமேதை குறட்குமரர் வாய்தி றந்தால்;
கடைவிரித்துக் கொள்ளாமல் கட்டிக் கொண்டோர்
காசினியில் பலர்உருகும் இந்த நாளில்,
படைவென்றே ஊர்திரும்பும் பாங்கு பொங்கப்
பலருமிவர் குறளமுதம் பருகச் செல்வர்!

தளர்மனத்து இளைஞர்களைக் கவர்ந் திழுக்கும்
தலைவர்கள் இத்தரணிதனில் யாருமில்லை!
வளமான குறள்வேத வழிந டப்பின்
வாழ்வுசிறப் படையும் அப்பணிசெய் தற்கே
இளங்குமர அய்யாவே இருக்கின்றீர் நீர்