புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

திருக்குறள்


அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள் கட்டாயம் இதில் கூறப்பெறும் அரசியல் நுட்பங்களைக் கற்றுணர்ந்து, ஆட்சியியலை அறிந்து, மக்கட்கு நலம் செய்யும் பயனுடைய ஆளுமையைச் செய்ய முயற்சி செய்ய இதனைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் அரசியல் நூல். 
சமநிலைப் பொதுவுடைமைப் பொருளியல் அமைப்பை மக்களிடம் ஏற்படுத்த விரும்புபவர்கள் இதில் கூறப்பெறும் பொருளியல் உண்மைகளை உணர்ந்து, அவற்றின்வழி தாங்கள் பொருளை ஈட்டவும், பேணவும், அதைப் பிறர்க்கும் பயன்படும்படியான பொதுமைப் பொருளியல் கொள்கைகளை வகுக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் பொருளியல் நூல்.
சாதி, சமய வேறுபாடற்ற சமநிலைக்குமான அமைப் பை உருவாக்கவும், இக்கால் உள்ள ஏற்றத் தாழ்வான சமூக நிலைகளில் சீர்திருத்தம் செய்யவும் விரும்பும் சமூகப் பொதுநலத் தொண்டர்கள் இதனை அறக் கற்று, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளுக்கு இதன் கருத்துக்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள உதவும் சமூகவியல் நூல்.
முந்து தமிழினத்திற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்து இன்றுவரை நேர்ந்துள்ள அரசியல், பொருளியல், சமூகவியல், மொழியியல், இனவியல், கலையியல், பண்பாட்டியல், கல்வியியல், அறிவியல் முதலியவற்றில் நிகழ்ந்த வீழ்ச்சிகளையும், தாழ்ச்சிகளை யும், அறியாமைகளையும், மூடநம்பிக்கைகளையும் அற வே அகற்றுகின்ற மறுமலர்ச்சி இனநல, மீட்பு முயற்சி களுக்கும், அத்தகைய மீட்பர்களுக்கும் போராட்டக் காரர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் செவ்வையான வழிகாட்டும் இனநல மீட்பு நூல்.
இதில் கூறப்பெறும் கருத்துகள் அரசியல், பொருளியல், சமுதாயவியல் அமைப்புகளை மாற்றியமைத்


தி.செல்வமனோகரன்
Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க ம