புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியியற் கோவை

'கல்வியியற் கோவை' எனப் பெயரிய இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கல்விக் கழகத்தாரினது சேவை மனப்பாங்கினாலும் ஆர்வத்தாலும், அறிவாலும் வெளியிடப்படுகின்றது.
உலகளாவிய கல்விக் கோள்களை முதற்கண் உளத்தமைத்து, முறைப்படுத்தி, மேற்புலக் கல்வியாளர்களினதும், கீழ்ப்புலக் கல்வி நெறியாளர்களினதும் சிந்தனைகளை ஒப்புநோக்கி என்பட்டறிவோடு பொருத்திக் கண்டு கல்விக்கலை தமிழ் கூறும் நல்லுலகில் நன்கு விரிந்து வரவ வேண்டும் எனும் குறிக்கோளுடன் எழுதப்பட்ட நூலாகும்.
இற்றைக்காலம் தமிழ் மொழிக்குத் தலையிடமும், தலைமைக்கு தமிழிடமும்; ஓங்கி வரும் காலம். தமிழுணர்வு பொங்கி வருங் காலம் அனைத்து நிலைகளிலும் பயிற்று மொழியாகத் தமிழ் வளர்ந்து வரும் காலம். எனவே மறுமலர்ச்சி நெறி தழுவித் தமிழ் மணம் கமழத் தமிழில் கலை நூல்கள் இல்லையெனும் குறையை ஓரளவு நீக்க இந்நூல் எழுதப்பட்டு வெளிவருகின்றது.
ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலேயே இலங்கைத் திருநாட்டில் மட்டுமே தமிழ்மொழி இளங்கலை மாணவர் நிலை தொடக்கம், கலாநிதிப் பட்ட நிலைவரைக்கும் பயிற்சிமொழியாக விளங்குகின்றது. இதனால் வளம் கொழித்து விளங்கும் தமிழ்மொழி உயர்நிலைக் கல்வி மொழியான காரணத்தினால் கூடிய செழுமை பெற்று வருகின்றது.
கல்வியும், தமிழ்மொழியும் ஒன்றோடொன்றிணைந்தவை. இவ்விரு நெறிகளிலும் காதலும் இவற்றின் வளர்ச்சியில் ஆர்வமும் காட்டிவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்விக் கழகத்தின் எண்ணத்தினை ஓரளவு இந்நூல் மலர்விக்கும் என்பது எனது உள்ளக்கிடக்கையாகும்.
இந்நூலையொட்டியும், தழுவியும் துறை நூல்கள் இன்னும் பெருகிக் கல்வி அன்னையும், தமிழன


சு.சுசீந்திரராஜா
Suseendirarajah, S Prof

சுவாமிநாதன் சுசீந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியில் மற்றும் ஆங்கித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் 1960 இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். 

இவர் மொழியியல் கற்கையில் ஆழமும் விரிவும் மிக்க புலமையாளர். இத்துறைசார் கல்விப் புலத்தின் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவர் மரபுவழி இலக்கணக்கூறுகளோடு நவீன மொழியியல் கருத்துக்கையும் இணைத்து தற்கால தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை ஆராயும் பண்பு கொண்டவர். மொழியல் புலமைவழி நின்று தமிழியலை நோக்கும் புது மரபுக்கு தடம் அமைத்திருப்பவர். தமிழ் இலக்கணம் கற்கு