புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

முதுசம்

'சிறுகதை வாழ்க்கையின் சாரளங்கள். வாழ்க்கையிலே ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை, அல்லது ஒரு சம் பவத்தை எடுத்துக் கூறுவது' என்கிறார் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன். 
'எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றை நான் ஒருபோதும் எழுதுவதில்லை' என்று உலகம் மதிக்கும் மக்கள் எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி கூறிய வாசகங் களை மனத்தில் நிறுத்தி எனக்குத் தெரிந்தவற்றைப் படைப்புக்களாக எல்லோரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் எழுதியுள்ளேன். 
'இலக்கியம் காலத்தின் கண்ணாடி' என்று சொல்வார்கள். சமுதாயத்தின் கண் நான் கற்றபாடங்கள் இன்றைய காலகட்டத்தின் அவசியம் கருதி அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்ற உந்துத லால், சிறுகதைத் தொகுதியாக வாசகர்கள் முன் வைத்துள்ளேன். 
இலக்கியம் பொழுதுபோக்குக் கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியதே இலக்கியம். 
உண்மையான கோரங்களை நான் தெரிந்துகொண்டிருக்கின் றேன். தினசரி வாழ்க்கையில் நிகழும் கோரங்களை நான் தரிசித்த வண்ணம் இருக்கின்றேன். நாம் வாழும் வாழ்க்கை கீழ்த்தரமான சாக்கடை வாழ்க்கை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித சமூகத்தை நான் அளவுகடந்து நேசிக்கின்றேன். என்றாலும் பிறருக்கு வேதனையளிக்க நான் விரும்பவில்லை. 
நாம் மானசிகமாக இருக்கக் கூடாதென்றும், அழகிய சொற் றொடர்களாலும், கவர்ச்சிகரமான பொய்களாலும் உண்மையை மூடிமறைக்கக் கூடாதென


கோகிலா மகேந்திரன்
Kokila Mahendiran

தெல்லிப்பழை மகாஜனா அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வியான கோகிலா மகேந்திரன் அவர்கள் ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி, எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், உளவியலாளர் எனப் பன்முக ஆளுமை பெற்று மிளிர்ந்து வருபவர். தனது ஆழமான, வித்தியாசமான உளவியல் கண்ணோட்டத்தாலும் எதையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய விளையும் முனைப்பினாலும் தாம் தொட்ட துறைகளிலெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

அவலத்தில் வாழ்கின்ற எம் மக்களுக்கு இரண்டு தசாப்த்தங்களாக உளவளத்துணை வழங்கிப் பலரின் வாழ்வுக்கு உரமூட்டியவர்.

'மற்றவர்களுக்குப் பயன் உடையதாய் வாழ்தலே வெற்றிகரமான வாழ்க்கை' என்று தனது மாணவர்களுக்கு எப்போதும் கூறும் கோகிலா மகேந்திரன் தமிது பல்துறை ஆளுமையை அதி உச்ச அளவிற்குப்