புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பின்னவீனத்துவ உரையாடல்

பின்னவீனத்துவத்தைப் பல பரிமாணங்களினூடாக நோக்கல் இந்நூலாக்கத்திலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு தேவையை நண்பர்கள் நீர்வை பொன்னையன், தெ.மதுசூதனன், த.சிவசுப்பிரமணியம் ஆகியோர் வற்புறுத்தியதுடன், பல மூலநூல்களையும் வாசிப்பதற்குத் தந்து உற்சாகமளித்தனர். 
பின்னவீனத்துவத்தை அறிவு நேர்மையுடன் நோக்க வேண்டியுள்ளது. சுய விருப்பின் காரணமாக அதனை மிகைப்படுத்திக் கூறுதலோ அல்லது தாழ்த்தி மதிப்பீடு செய்தலோ பொருத்தமற்றது. 
பல புதிய சொற்களஞ்சியங்களைப் பின்னவீனத்துவம் உலகின் அறிவுத் தேட்டத்துக்குத் தந்துள்ளது. அவை தமிழ் மொழிக்கும் வளம் தந்துள்ளன. சமகாலக் கருத்து வினைப்பாடுகளை மேலெழச் செய்வதில் பின்னவீனத்துவத்தின் பங்கு நிதானத்துடன் நோக்குதற்குரியது. 
1960ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஐரோப்பாவின் அறிகை விசையாக மேலெழத் தொடங்கிய பின்னவீனத்துவச் சிந்தனைகள் கடந்த நூற்றாண்டின் பிற்கூற்றிலிருந்து தமிழில் வேகமாகப் பரவத் தொடங்கின. ஒவ்வொருவரும் தத்தமது அகவயப் பாங்கோடு பின்னவீனத்துவத்தை அணுகுதல் தமிழிற் பழக்கமான பாடமாகியும் விட்டது. இந்நூலை வெளியிடும் சேமமடு வெளியீட்டாளர் நன்றிக்குரியவர். 
சபா.ஜெயராசா
தலைவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்

 

 


துரைச்சாமி சிவபாலன்
Thuraisamy Sivabalan

துரைசாமி சிவபாலன் ( காந்தி ) யாழ்  / புங்குடுதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் துரைச்சாமி சிவபாலன் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ், புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களைக் கற்றுக் கலைப்பட்டதாரி பட்டம் பெற்றவர். ஆசிரியரான இவர் மன்னார் நானாட்டானிலும் சிலகாலம் வாழ்ந்தவர். இவர் புலம் பெயர்ந்து இத்தாலி-பலெர்மோ நகரத்தில் 1990 இல் வாழ்ந்தபோது "மழலை" எனும் கல் இலக்கிய மாநாந்த ச்ஞ்சிகையினை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து வெளியிட்டவர். அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். 

 
படந்த 12 ஆண்டுகளாக இங்கிலாந்தில் மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்துவரும்