புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சிகைகளும் எதிர்காலப் போக்குகளும்

நூலாசிரியர் உரை

பூகோளக் காலநிலை மாற்றம் என்பது பூகோளரீதியாக ஒரு பிரதான பிரச்சினையாக இன்று மாறி வருவதுடன் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் அதனால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியும் வருகின்றனர். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் பல்வேறு மகாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றது. எனவே காலநிலை மாற்றத்தின் சிக்கலான விடயங்கள் பற்றியும் பாதிப்புக்கள், எல்நினோ மற்றும் சர்வதேச மகாநாடுகள் பற்றியும் மிக விரிவாக இந்நூலில் ஆராயப்படுகின்றது.
    விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் பூகோளம் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. புவியியல் பாடத்தினைப் பரீட்சை நோக்கிலன்றி, அதனை ஆழமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தரமான நூல்களின் பற்றாக்குறை முக்கியமானதொரு குறைபாடாகக் காணப்படுகின்றது. இலங்கையின் பாடசாலை முறைமையைப் பொறுத்தவரை வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகப் புவியியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்றைய கல்விமுறையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுய கற்போராக விருத்தி பெற வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்


சரவணமுத்துப் பிள்ளை
Saravanamuthu Pillai

மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. 
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி  இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் க