புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி அகராதி

இன்று உலக மொழிகள் நவீனமடைந்து வருகின்றன. இதனால் தனித்தனி புலமைத்துறைகளுக்கான அகராதிகளின் வெளியீடுகள் சிறப்புப் பரிமாணங்களாக அமைந்து வந்துள்ளன. தமிழ்மொழியில் பொது அகராதிகளின் வெளியீடுகளைத் தொடர்ந்து அடுத்து நிகழ வேண்டியது சிறப்பு அகராதிகளின் ஆக்கமாகும். தமிழ்மொழி நவீன உலகில் நுழைவதற்கு அத்தகைய முயற்சி அவசியமானதாகும். 
தற்காலத் தமிழை வரலாற்று மொழியியலாளர்கள் புதுத் தமிழ் என்றே குறிப்பிடுகின்றனர். 'புதிய தமிழ் என்று சொல்லும் போது புதிய காலத்தில் வழங்கும் தமிழ் என்று பலரும் பொருள் கொள்ளுவார்கள். புதிய காலம் என்னும் போது புதிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கொண்ட காலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்தப் புதிய மதிப்பீடுகளை வெளியிடும் தமிழையே புதிய தமிழ் என்று சொல்ல வேண்டும். புதிய மதிப்பீடுகள் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களினால் பிறப்பவை' என்று பேராசிரியர் இ.அண்ணாமலை குறிப்பிடுவார். மொழிக்கும் சமூகத்துக்கும் நெருங்கிய உறவுண்டு. மொழி வழக்கும் சமூக உணர்வைப் பிரதிபலிக்கும் என்ற பொது உண்மைகளையொட்டி புதிய தமிழை வரையறுக்கலாம். 
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் மற்றும் பொருள்கோடல் விரிவாக்கங்களையும் கலைச்சொற்களின் பெருக்கத்தையும் 'புதிய தமிழ்' என்னும் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அகத்தூண்டுதலாலும் புறத்தூண்டுதலாலும் சமூகத்தில் ஏற்படும் புதிய போக்குகளாலும் மொழி மாறுதலடைகிறது. 
புதிய தமிழில் இரண்டு புதிய சமூகப் போக்குகளின் தாக்கம


சபா.ஜெயராசா
Jeyarasa, Saba Prof

பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் "கல்வியியல்" துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது "புலமைமரபு" எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.

இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்பு