புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வழிகாட்டலும் ஆலோசனையும்

 ஐந்தாம் பதிப்பாக வெளியிடப்படும் வழிகாட்டலும் ஆலோசனையும் எனும் இந்நூலில் உளவளத்துறை சார்பாக மேலும் பல விடயங்கள் சேர்க்கப்படடுள்ளன. இந்நூலின் முதற் பதிப்பு  பல்கலைக்கழகங்களிலும், ஆசிரியக் கல்லூரிகளிலும் பயிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் ஆலோசனையும் என்ற பாடநெறியைக் கருத்திற் கொண்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2ம், 3ம்,க்கிய அத்தியாயங்கள்; சேர்க்கப்பட்டுள்ளன. காலத்தின் தேவையைக் கருத்திற்; கொண்டு உள்ளுர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உளத் தேவைகளுக்கு ஏற்ற ஆலோசனை விடயங்கள், சமுதாய மீள்சீராக்கல் நடவடிக்கைகள், உளநலத்தைப் பேணுதல் போன்ற விடயங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 
  இந்நூல் பொதுவாக ஆசிரியர்களுக்கும், உளநல விருத்தித் துறையில் அக்கறை கொண்டவர்களுக்கும், மக்கள் மத்தியில் களத்தில் தொண்டாற்றும் சேவையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக சமூகத்தொண்டர்கள் , சுகாதார சேவையாளர்கள், தாதியர், மதகுருமார், பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்குத் தேவையான பல பொதுப்படையான விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்நூல் ஒருவரின் தனிப்பட்ட உள விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை வாசகர்கள் விமர்சித்துள்ளனர்.
  மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டுள்ள இந்நூலை கட்டிளமைப்பருவ மாணவர்களும் வாசித்துக் கிரகித்துக் கொள்ளலாம். மேலும் ஆங்கில நூல்களை வாசிப்பதற்கு உதவும் பொருட்டு பல விஞ்ஞான உளவியல் ஆங்கிலக் கலைச்சொற்களும் , அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப்பதங்களும் இங்கு சேர்


முகிலன்
Mukilan

        உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       என்று சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். 
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார