புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கற்றல் உளவியல்

வளர்ந்து விரிந்து வியாபித்து வரும் கல்விச் செயற்பாடுகள் கல்வி உளவியலின் தேவையை மீள வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. அறிவுப் பெருக்கை அனைத்து மாணவர்க்கும் ஆழத்துடனும் செறிவுடனும் கையளிப்பதற்குக் கற்றல் உளவியல் பல நிலைகளிலும் பல பரிமாணங்களிலும் துணைசெய்ய வல்லது. கற்றல் உளவியலின் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்குமிடையேயுள்ள இடைவெளிகளை மீளாய்வு செய்வதற்குரிய தேவையை நண்பர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர். 
பேராசிரியர் வ.ஆறுமுகம், யாழ்.பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் செல்வி சுசிலா அருளானந்தம், கலாநிதி அனுசியா சத்தியசீலன், கலாநிதி த.கலாமணி, கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம், பேராசிரியர் க.சின்னத்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழகத்துக் கல்வியியற்புலத் தலைவர் பேராசிரியர் ம.செல்வராஜா, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வியியற் பீடாதிபதி பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மற்றும் கலாநிதி எம்.கருணாநிதி ஆகியோர் இவ்வாறான நூலாக்கத்தின் தேவையைப் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளனர். 
புதிய ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய நூலாக்கத்தின் தேவையை வேண்டிநிற்கும் நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும், சேமமடு வெளியீடுகளின் தலைவர் திரு.பூலோகசிங்கம் பத்மசீலன் அவர்களும் நன்றிக்குரியவர்கள்.

 


பொ.கனகசபாபதி
Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசா