புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அரசியல் விஞ்ஞானம் : அரசு பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும்

அரசியல் மற்றும் சமூக அமைதி, உறுதிப்பாடு மற்றும் பாது காப்பு என்பவற்றுக்கிடையில் நிலவும் நித்தியமான தொடர்பின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வு முன்னொருபோதும் இல்லாத ளவுக்கு இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணி யில் அண்மைக்காலத்தில் அரசியல் விஞ்ஞானத்தைப் பற்றிக் கற்பதில் ஒரு புத்தெழுச்சி எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இன்று அரசியல் விஞ்ஞானத்தின் மூலத்துவங்கள் பற்றிய கற்கை க.பொ.த (உ.த) வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் வேரூன்றி வருகின்றது. எமது நாட்டின் பிரதான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசியல் விஞ்ஞானத் தோடு தொடர்பான பல்வேறு கற்கை நெறிகளை தமது பாட விதானத் துக்குள் சேர்த்துள்ளன. பட்டப்படிப்பினை வெளிவாரியாகத் தொடரும் பட்டதாரி மாணவர்களுள் அதிக எண்ணிக்கையினர் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகத் தெரிவுசெய்துள்ளனர். இப்பாடத்தை முறைசார் முறையில் கற்காத சாதாரண மக்கள் மத்தியிலும் அரசியல் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இவ்ஈடுபாட்டை புதினத்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளினூடாகவும், கலந்துரையாடல்கள் மற்றும் கருத் தரங்குகளினூடாகவும், விரிவுரைகள் மற்றும் உரைகளினூடாகவும் இக்காலப் பகுதியில் இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் காணமுடிகிறது.  
மக்கள்  இறைமை, அரசியல் யாப்புத் திருத்தம், அரசாங்க மாதிரி கள், அரசாங்க அதிகாரம், அரசாங்கத்தின் பணிகள், அதிகாரப் பரவ லாக்கம், மோதல், மோதல் முகாமைத்துவம், மோதல் தீர்த்தல், சட்டத் துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறைத் தொடர்புகள், பொதுக் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறை, தேசிய, சமூக, சர்வதேச சமூகத்தொட


தை.தனராஜ்
Thanaraj, T

தையல்முத்து தனராஜ் மாணவ ஆசிரியராகத் தனது கல்விப் பணியினை ஆரம்பித்தவர். தொடர்ந்து ஆசிரியர் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்கள் பெற்றுத் தனது தகுதியை, ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். பன்னாட்டு கல்விசார் பயிற்சிகளிலும் கல்வி மாநாடுகளிலும் பங்குபற்றியவர். 

இன்று கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், வளவாளராகவும், ஆய்வாளராகவும் பரிணமித்து வருபவர். கற்றல், தேடல், ஆய்வு என்பதை தனது பண்புசார் கோலங்களாக வெளிப்படுதுபவர். தமிழ்மொழி மூலமான கல்விச்சூழல், புலமைத்துவம் தொடர்பான அகல்விரி சிந்தனைகளையும், விமரிசனங்களையும் மற்றும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்.