புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

புனைகதை இயல்

தமிழில் புனைகதை இலக்கியம் பற்றிய சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வும் பல நிலைப்பட்ட பல தளப்பட்ட செல்நெறிகளாக விருத்தி பெற்றுள்ளன. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின்னர் புனைகதை இலக்கியம் 'புனைகதை இயல்' ஆக வளர்ச்சியடைந்து புதுப்பிரக்ஞையும் புதுப்பரிமாணமும் மிக்க ஓர் துறையாக பரிணாமம் பெற்றுள்ளது. 
இன்று எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகத் திகழ்வது புனைகதைகளே ஆகும். இவற்றின் செல்வாக்கை தாக்கத்தை அடிப்படையாகவும் அளவுகோலாகவும் கொண்டு நூல்களை 'புனைகதைகள்' என்றும் ' புனைகதைகள் அல்லாதன' என்றும் பிரிக்கும் முறை ஏற்பட்டது. உரைநடைப்புனைகதை என்பது சிறுகதை, நாவல் ஆகிய இரண்டையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் பயன்பட்டு வருகின்றது. 
தொடர்ந்து மேனாட்டுத் தொடர்பால் வந்த இலக்கிய வடிவங்களை விளங்கிக்கொள்ளும்  முயற்சி தீவிரப்பட்டது. இதனால் கவிதை, உரைநடை போன்றவற்றின் இயக்கத்துக்கான கோட்பாட்டு விளக்கத்தினை மேனாட்டு இலக்கியக் கோட்பாட்டாளர்கள் விமரிசகர்கள் வழியாக அறிந்துகொள்வதற்கு விமரிசனப் பயில்வு இடமளித்தது. 
இன்று நாம் இலக்கிய விமரிசனம் என மேற்கொள்ளும் இலக்கியக் கற்கை மேல்நாட்டு கல்விமுறை வழியாக வந்தது. அதாவது மேனாட்டு இலக்கிய அறிகையுடனேயே வந்தது. இந்தப் பண்பு புனைகதை இயல் பற்றிய அறிதல்மரபிலும் சிந்தனை மரபிலும் பெரும் தாக்கம் செலுத்தின. நவீன இலக்கியப் பயில்வின் பரப்பை ஆழ அகலப்படுத்தின. சமகாலத்தில் பன்னாட்டு இலக்கியப் பரப்பில் பெருமளவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட துறையாக பு


துரைச்சாமி சிவபாலன்
Thuraisamy Sivabalan

துரைசாமி சிவபாலன் ( காந்தி ) யாழ்  / புங்குடுதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் துரைச்சாமி சிவபாலன் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ், புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களைக் கற்றுக் கலைப்பட்டதாரி பட்டம் பெற்றவர். ஆசிரியரான இவர் மன்னார் நானாட்டானிலும் சிலகாலம் வாழ்ந்தவர். இவர் புலம் பெயர்ந்து இத்தாலி-பலெர்மோ நகரத்தில் 1990 இல் வாழ்ந்தபோது "மழலை" எனும் கல் இலக்கிய மாநாந்த ச்ஞ்சிகையினை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து வெளியிட்டவர். அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். 

 
படந்த 12 ஆண்டுகளாக இங்கிலாந்தில் மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்துவரும்