புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கதைக் கோலங்கள்

கதைக் கோலங்கள் என்னும் இந்நூலில் நாற்பத்தைந்து கதைகள் இடம்பெறுகின்றன. இவற்றில் சில தத்துவங்களை வெளிப்படுத்துவதற்காக சமகாலச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டவை. சிலகதைகள் மிருகங்களை வைத்துத் தத்துவங்களை சொல்வதாக எழுதப்பட்டவை. இதில் வரும் சில கதைகள், ஆங்கில மொழிக் கதைகளை மீள் உருப்பெறச் செய்துள்ளேன். இன்னும் சில மொழிபெயர்ப்புக் கதைகளாக அடங்குகின்றன. 
குறிப்பாக பைபிளில் வரும் ஆன்மீகத் தத்துவங்களை விளக்கும் கதைகளாகவும் எழுதியுள்ளேன்.  கதைக் கோலங்களில் வரும் கதைகளை பொருள், மொழி, நடை என்பவற்றைக் கொண்டு சிறுவர்களுக்கான பகுதியாகவும், வளர்ந்தோருக்கான கதைகளாகவும் வகுத்து வைத்துள்ளேன். எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எனது முதல் ஆக்கமாக இது வெளிவருகிறது. 
இந்நூலினை உருவாக்க எனக்கு அரிய ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் கொடுத்த ஏ.எஸ். முனைவர் பேராசிரியர் சபா.ஜெயராசா, டாக்டர் சு.மகாலிங்கம், கலாபூஷணம் சு.துரைசிங்கம், திரு.தெ.மதுசூதனன் ஆகியோருக்கும் முகப்புப் படத்தினை வரைந்து தந்த ஓவியர் கனிவுமதி, உள்படங்கள் வரைந்துதவிய ஓய்வுநிலை அதிபர் வே.சண்முகராசா (சண்) மற்றும் தங்கள் வெளியீடாகவே வெளியிடும் சேமமடு பொத்தகசாலை அதிபர் சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரியன. 

வி.அரியநாயகம்


தி.கமலநாதன்
Kamalanathan, T

திருநாவுக்கரசு கமலநாதன் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரிய கல்வியாளர் சேவையில் முகிழ்த்தவர். விரிவுரையாளர், உபபீடாதிபதி,  பீடாதிபதி எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி உயர்ந்தவர். கல்வியியல் கற்கையில் 'முனைவர்' பட்டம்  பெற்றவர். தனது சொல் செயலால் தன்னைத் தனியாக அடையாளம் காட்டியவர்.         கல்விச் சூழலில் காலத்தை வென்ற கமலமாகப் பூத்தவர். 

இவர் பெற்ற அனுபவமும் அறிவும் வளமானது.  இதுவே இவரை கல்வி அமைச்சில்  கல்விசார் தரவிருத்திக்கு மதியுரைஞராகவும் இருத்தியுள்ளது. தொடர்ந்து கல்வியியல்சார் சிந்தனைகளை ஆக்கமாகவும் வெளிப்படுத்திக்         கொண்டிருப்பவர். சமூக சமயப் பணிகளிலும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு 'வாழ்வின் அர்த்தம்' முழுமையடைய       இயங்கிக் கொண்டிருப்பவர்.