புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியும் உளவியலும்

ஈழத்துக் கல்வியியல் செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கின்ற ஒரு மனிதன் பேராசிரியர் கலாநிதி.ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் நூலை விடுத்து கற்பானாயின் அவனால் கல்வியியல், உளவியல் தொடர்பில் முழுமையான அறிகையினைப் பெற முடியாதென்பதே உண்மையாகும்.
1980களில் தமிழில் கல்வியியல், உளவியல் தொடர்பான நூல்கள் மிகமிக அரிது. என்னாசான் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த  காலத்தில் நானும் ஒரு மாணவனாகக் கற்றதையும் அவர் எனக்கு கற்பித்ததையும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் கல்வி உளவியல் துறை சார்பாக என்னை வழிகாட்டியமையையும் நினைத்துப் பார்க்கின்றேன். 
கல்வியியலின் எத்துறையாக இருந்தாலும் மிக ஆழமாக, தெளிவாகக் கற்பிக்கும் திறனும் ஆளுமையும் மிக்க முறையில் விரிவுரைகளை ஆற்றுவதையும் காணலாம். அந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை யாவும் ஒருமித்த வருகையே 'கல்வியும் உளவியலும்' ஆகும். அதனை 25 அத்தியாயங்களாக வகுத்து, பகுதி ஐஇஐஐ என அவர் காலத்தில் இரு நூல்களாக வெளியிடப்பட்டது. இவற்றை அதன் உட்பொருள் நோக்கி அறிமுகம், வளர்ச்சி,  உளவளர்ச்சி, உளநலம், வழிகாட்டல், உளத்தொழிற்பாடு, கற்றல் கொள்கை, மனிதகற்றல், கற்பித்தல் ஆகிய ஒன்பது அறிகைக்குள் உள்ளடக்கி நோக்கலாம். 
இன்றைய ஆசிரியர்கள், பயிற்சிக்காயினும் சரி, பயிலுதலுக் காயினும் சரி பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும்


விமலா கிருஷ்ணபிள்ளை
Vimala, Krishnapillai Dr

பாடசாலைகள் கல்வி அறிவையும், சிறந்த உளப்பாங்குகளையும், பயனுள்ள திறன்களையும் வழங்கும் இலக்குகளுடன் இயங்கி வருகின்ற போதிலும் இன்றைய சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் காரணமாக, மாணவர்களுக்கு இன்று பல்வேறு துறைகளில் வழிகாட்டலும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. தொழில், கல்வி, பாடப்பிரிவுகளைத் தெரிதல் போன்றவற்றில் மட்டுமன்றி மாணவர் அடைகின்ற விரக்திகள், பதட்டங்கள், அவர்களிடம் எழுகின்ற அந்தரங்கமான பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு நல்வழி காட்ட, இப்பணியில் கோட்பாட்டு அறிவும் செயற்பாட்டு அனுபவமும் மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இத்துறை சார்ந்த தமிழ் நூல்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கலாநிதி விமலா கிருஷ்ணபிள்ளை அவர்கள் இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மட்டுமன்றி பெற்றோரும் பயனடையக் கூடிய இந்நூல் தமிழ்கூறும் நல்லுலக