புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும்

நிறுவனத்தின் முகாமையாளர்கள் ஒவ்வொருவரும் முகாமைத்துவக் கோட்பாடுகளை அறிந்திருத்தல் இன்றியமையாதது. நிறுவனம் தொடர்பான பயனுள்ள அகக்காட்சியைப் பெறுதல், நிறுவனத்தின் வளங்களைச் சிறப்பாகப் பண்படுத்துதல், விளைதிறனுள்ள முகாமைத்துவம், விஞ்ஞான முறையிலான தீர்மானம் மேற்கொள்ளல், சூழல் மாற்றங்களால் ஏற்படும் தேவைகளை நிறைவேற்றுதல், சமூகப் பொறுப்பினைப் பூர்த்திசெய்தல், பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சிகளை முகாமைத்துவம் செய்தல் முதலிய விடயங்களின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு  முகாமைத்துவக் கோட்பாடுகள் பக்கபலமாக இருக்கின்றன. பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பை ஏற்பவர்கள் அன்றாட நிருவாகச் செயல் முறைகளை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாது நிறுவனத்திலுள்ள சகல வளங்களையும் விளைதிறனுடன் பயன்படுத்தி நிறுவனத்தின் விளைதிறனை மேம்படுத்துதல் அத்தியாவசியமானது.
ஆரம்ப காலங்களில் கல்வி நிருவாகமானது ஒப்பீட்டடிப்படையில் பொது நிருவாகக் கோட்பாடுகளையும் சிந்தனைகளையும்  அடியொற்றி யதாக இருந்து வந்துள்ளன.  பொது நிருவாகத்துறையில் உயர்தொழில் அனுபவம் மிகுந்தவர்களால் விருத்திசெய்யப்பட்ட  கோட்பாடுகளும்  கொள்கைகளும் கல்வி நிருவாகத்திலும் இடம்பிடித்திருந்தன. பாடசாலை முகாமைத்துவத்தில் அதிபர்களின் தலைமைத்துவம், ஆசிரியர்களின் பொறுப்புகள் மற்றும் இருசாராரினதும் ஆளுமைகள் பொதுத்துறை நிருவாகத்திலிருந்தும் பெருமளவில் வேறுபட்டுக் காணப்பட்ட வேளையில் கல்வி முகாமைத்துவமும் தனித்துறையாக விருத்திபெறத் தொடங்கியன.
இன்று கல்வித்துறையிலே முக


வி.அரியநாயகம்
Ariyanayakam, V

திரு வி.அரியநாயகம் அவரகள் சுண்ணாகம் விரியப்பாலத்தில் பிறந்தவர். சுண்ணாகம் திருஞான சம்பந்த வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி, மல்லாகம் மகா வித்தியாலயம், சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வி கற்று, ச்ன்னப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார்.

ஆசிரியத் தொழிலில் அனலைதீவு சதாசிவ ஆங்கிலப்பாடசாலை உதவி ஆசிரியர், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, அடம்பன் மகா வித்தியாலயம், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், செங்குந்தா இந்துக்கல்லூரி ஆகியவற்றில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது அவுஸ்திரைலியாவில் வாழ்கிறார்.