புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

மெய்யியல்

பேராசிரியர் நா.ஞானகுமாரன் கடந்த முப்பந்தைந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மெய்யியல் துறையில் பணியாற்றிவருபவராவர். துடிப்பும் ஆர்வமும் மிக்க இவர் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். 'சைவசித்தாந்தத் தெளிவு', 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்', 'நயந்தரும் சைவசித்தாந்தம்', 'அருளாளர்களின் சமய அனுபவம்', 'மெய்யியல்', 'சைவ சமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு', 'சைவ சித்தாந்தத்தில் அத்வைத எண்ணக்கருத்து', 'வேதாந்த மெய்யியல்', 'மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும்' போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார். சைவசித்தாந்தத் தெளிவானது சமீபத்தில் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. அதேபோல இந்நூலும் அநேகரது வேண்டுகோளிற்கிணங்க திருத்திய பதிப்பாக புதிய அத்தியாயங்களும் இணைக்கப்பட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும். இவரது சைவ சித்தாந்தத் தெளிவானது சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மெய்யியல், சைவசித்தாந்தம், வேதாந்தம், சார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிப் பாராட்டைப் பெற்றவர். இவர் சர்வதேச ஆய்வரங்குகளிலும் பல கட்டுரைகளைச் சமர்ப்பித்ததுடன் ஒப்சலா பல்கலைக்கழகம்  சுவீடன், அரிசோனா பல்கலைக்கழகம் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆய்வாளராகவும் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். 
திருத்திய பதிப்பாக வெளிவரும் இந் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன். மெய்யியலைக் கற்க விரும்பும் மாணவர்


அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி
Arulanandam Sri Kanthaluxmy

அருளானந்தம் சிறீகாந்தலட்சுமி கல்விசார் நூலகராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். தொடர்ந்து நூலகவியல் பண்பாட்டைச் சமூக மட்டத்தில் விருத்தி செய்யத் தனது அறிவு, ஆய்வு சார்ந்த புலங்களை குவியப்படுத்திச் செயற்படுபவர். இவர் கல்விசார் நூலகர் என்னும் பதவியை வெறுமனே அலங்கரிக்கவில்லை. கல்வியின் விரிவாக்கம், அறிவுப் பிரவாகம், நூலக தகவல் அறிவியல் போன்றவற்றை தமிழ்ச் சிந்தனையுடன் தமிழர் வாழ்புலத்துடன் இணைக்கும் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர். வாசிப்புப் பண்பாட்டின் பன்முகப்பாட்டை வலியுறுத்தும் சமூக செயற்றிட்டங்களை மக்கள் மயப்படுத்துவதில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர்.