புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இளம்வளர்ந்தோர் இலக்கியம்

இளம் வளர்ந்தோர் இலக்கியம் (லுயடவைநசயவரசந) சமகால இலக்கியத் துறையில் அதிக முக்கியத்துவத்தை எட்டத் தொடங்கியுள்ளது. பெருந்தொகையான புனைகதை மற்றும் புனைகதை சாரா நூல்கள் இத்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளிலே வெளிவந்த வண்ணமுள்ளன. தனித்துவமான திறனாய்வு முயற்சிகளும் எழுகோலம் பெற்று வருகின்றன.
இளைஞர் நலன்களை மேம்படுத்தும் வகையில் அரச திணைக்களங்களும், மன்றங்களும், தொண்டு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இளைஞர்களின்  அரசியல் ஈடுபாடும் சமூக மாற்றங்களில் அவர்களது பங்கெடுப்பும், ஆயுதப் போராட்டங்களில் ஈடுபாடும் கல்வியியலாளரதும் சமூகவியலாளரதும் ஊன்றிய கவனத்தைப் பெற்று வருகின்றன.
இளைஞர்களை ஆற்றுப்படுத்தலும் அவர்களின் ஆக்க மலர்ச்சியை வெளிக்கொண்டு வருதலும், உடனடித் தேவைகளாக மேலெழுகின்றன. சமூகப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் துலங்குவோராய் இளைஞர்கள் இருத்தலினால்  அவர்கள் மீதான கவனமே மேலோங்கத் தொடங்கியுள்ளது.
சபா.ஜெயராசா

 


ரீ.விக்னேஸ்வரன்
Vigneswaran, T

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் முன்னாள்  விரிவுரையாளரும், தற்போதைய வருகை விரிவுரையாளரும் ஆவார்.  இவர் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் றோட்டறிக்; கழகத்தின் அங்கத்தவராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுபவர். 

 
அரசறிவியல் பாடங்களை இற்றைப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து தேடலும், வாசிப்பும் கொண்டு தனது ஆளுமையை செழுமைப்படுத்துபவர். அரசறிவியல் மாணவர்களுடனும், ஆர்வமுள்ள வாசகர்களுடனும் பல புதிய செய்திகளை, புதிய கோணத்தில் பகிர்ந்துகொள்ள துடிப்பவர். அரசியல் சார்ந்த ஆக்கங்களை படைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்.