புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

புனைகதை இயல்

தமிழில் புனைகதை இலக்கியம் பற்றிய சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வும் பல நிலைப்பட்ட பல தளப்பட்ட செல்நெறிகளாக விருத்தி பெற்றுள்ளன. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின்னர் புனைகதை இலக்கியம் 'புனைகதை இயல்' ஆக வளர்ச்சியடைந்து புதுப்பிரக்ஞையும் புதுப்பரிமாணமும் மிக்க ஓர் துறையாக பரிணாமம் பெற்றுள்ளது. 
இன்று எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகத் திகழ்வது புனைகதைகளே ஆகும். இவற்றின் செல்வாக்கை தாக்கத்தை அடிப்படையாகவும் அளவுகோலாகவும் கொண்டு நூல்களை 'புனைகதைகள்' என்றும் ' புனைகதைகள் அல்லாதன' என்றும் பிரிக்கும் முறை ஏற்பட்டது. உரைநடைப்புனைகதை என்பது சிறுகதை, நாவல் ஆகிய இரண்டையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் பயன்பட்டு வருகின்றது. 
தொடர்ந்து மேனாட்டுத் தொடர்பால் வந்த இலக்கிய வடிவங்களை விளங்கிக்கொள்ளும்  முயற்சி தீவிரப்பட்டது. இதனால் கவிதை, உரைநடை போன்றவற்றின் இயக்கத்துக்கான கோட்பாட்டு விளக்கத்தினை மேனாட்டு இலக்கியக் கோட்பாட்டாளர்கள் விமரிசகர்கள் வழியாக அறிந்துகொள்வதற்கு விமரிசனப் பயில்வு இடமளித்தது. 
இன்று நாம் இலக்கிய விமரிசனம் என மேற்கொள்ளும் இலக்கியக் கற்கை மேல்நாட்டு கல்விமுறை வழியாக வந்தது. அதாவது மேனாட்டு இலக்கிய அறிகையுடனேயே வந்தது. இந்தப் பண்பு புனைகதை இயல் பற்றிய அறிதல்மரபிலும் சிந்தனை மரபிலும் பெரும் தாக்கம் செலுத்தின. நவீன இலக்கியப் பயில்வின் பரப்பை ஆழ அகலப்படுத்தின. சமகாலத்தில் பன்னாட்டு இலக்கியப் பரப்பில் பெருமளவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட துறையாக பு


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச