புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

மேலைத்தேய மெய்யியல்:சில பரிமாணங்கள்

மனித வரலாற்றின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஆரோக்கி யமான அறிவு வளர்ச்சிக்கு மெய்யியலின் பங்களிப்பு முக்கியமானது. இன்று பரிணமித்துள்ள பல்வேறு துறைகளும் மெய்யியல் என்ற தாய் விஞ்ஞானத்தில் இருந்து ஊற்றெடுத்தவையே என்றால் அது மிகை யாகாது. குறிப்பாக மேலைத்தேய மெய்யியலின் விருத்தியினை நாம் பரந்து விரிந்துள்ள பல்வேறு துறைகளின் ஊடாகவும் கண்டுகொள்ள முடிகின்றது. அவை அனைத்தையும் ஒரு நூலின் கண் உள்ளடக்குதல் மிகவும் சிரமமானதாகும். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளையும், சில கோட்பாடுகளையும், சில சிந்தனைகளையும் சுமந்து 'மேலைத்தேய மெய்யியல்: சில பரிமாணங்கள்'  என்ற இந்நூல் வெளிவருகின்றது. இந்நூலின் கண் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுரைகள் இதுவரை தமிழில் வெளிவந்த மெய்யியல் நூல்களில் பெரிதளவில் விதந்துரைக்கப்படாதவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு நாடு வளம்பெற அந்நாட்டின் ஆட்சியாளன் மெய்யிய லாளனாக இருக்க வேண்டும் என்ற பிளேட்டோவின் சிந்தனைகளை இந் நூலின் முதலாவது அத்தியாயம் விளக்குகின்றது. இலட்சிய அரசில் மெய்யியல் ஆட்சியாளனின் பண்புகள், மெய்யியல் ஆட்சியாளனை உருவாக்குவதற்கான கல்வித்திட்டம், ஆள்வோருக்கான பொதுவுடமை வாழ்க்கைமுறை, இலட்சிய அரசில் இருக்க வேண்டிய சமுதாயக் கட்டமைப்பு என்பன பற்றிய பிளேட்டோவின் சிந்தனைகளை 'பிளேட்டோவின் மெய்யியல் ஆட்சியாளன்' என்ற அத்தியாயம் உள்ளடக்கியுள்ளது. மெய்யியலின் முதன்மையினையும், முக்கியத் துவத்தினையும், மேன்மையினையும் வலியுறுத்தும் பொருட்டு இவ் அத்தியாயம் முதலாவது அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளது.
பயனை அளவுகோ


அகளங்கன்
Akalangan

பண்டைய தமிழ் மணத்தையும், இன்றைய தமிழ் உணர்வையும் தனது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் வாழ்வியலாலும் மக்கள் மத்தியில் பரப்பி வருபவர். தமிழிலக்கியக் கட்டுரைகள், கவிதை, ஆய்வு, நாடகம், சிறுவர் இலக்கியம், அறநூல் உரைகள், இசைப் பாடல்கள், சிறுகதை எனப் பல்வேறு தளங்களில் இயங்குபவர். 

 
தேசிய, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருதுகள், வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர் விருது மற்றும் அரச, அரச சார்பற்ற சமூக, சமய நிறுவனங்களின் தேசிய விருதுகளையும், பரிசுகளையும், பட்டங்களையும் பெற்ற சிறந்த இலக்கிய கர்த்தா.வன்னியின் மைந்தன் என்று தன்னை அடையாளப்படுத்துவதை பெருமையாக கொள்பவர்.  வன்னி மக்களின் கல்விப் பயணத்திற்கு தினம் அரும்பாடுபட்டுக் கொண்டு தன்னை முழு