புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு

'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற இந்நூலை ஆக்குவதற்குத் தகவல் திரட்டுவதிலும், அனைத்துச் சிறுகதைகளையும் கூடிய வரை படிப்பதிலும் அதிக காலத்தை நான் எடுத்துக்கொண்டேன். 400 சிறுகதைப் படைப்பாளிகளையும், 274 சிறுகதைத் தொகுதிகளையும், சுமார் எண்ணாயிரம் வரையிலான பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளையும் கொண்ட குறுகிய வரலாறுதான் ஈழத்துச் சிறுகதை வரலாறு. எனினும், நமது சிறுகதை இருப்பினை அடையாளம் காண்கின்ற முயற்சியும், அதன் மூலம் நாம் தமிழிலக்கியத்தில் - குறிப்பாகச் சிறுகதைத் துறையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் கணிப்பீடு செய்வதில் நிறைய இடர்பாடுகளுள்ளன. இன்று வரையிலான சிறுகதை வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய கணிப்பீடுகள் சார்புநிலை சார்ந்தவையாகவே விளங்குகின்றன. சமநிலை சார்ந்தவையாகவில்லை. 
மதிப்பீடு என்பது அவரவர் 'சுவை' சார்ந்த விடயமாயினும் ஒரு துறைக்குத் தம் பங்கினைச் செய்தவர்களை அடையாளங் காணாது விடுவதும், அவர்தம் படைப்புக்களைப் பதிவு செய்யாது விடுவதும் இலக்கிய வரலாற்றுத் தவறாகுமென நான் நினைத்தேன். அந்நினைவின் வெளிப்பாடே இந்நூல். என் மதிப்பீட்டினை ஒத்த கருத்தினை ஒரு படைப்பாளி குறித்தோ, ஒரு படைப்புக் குறித்தோ விமர்சக அறிஞர்கள் கொண்டிருந்தபோது, அவர்தம் கருத்துக்களை அவ்வாறே எடுத்தாண்டுள்ளேன், உரியவாறு அவர்களின் உசாத்துணை பதிவு செய்யப்பட்டுள்ளது. 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' கூடியவரை பூரணமானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதெனக் கருதுகின்றேன். என் சக்திக்கும் தேடலுக்கும் அப்பாற்பட்டு, சில படைப்புக்களும் படைப்பாளிகளும் விடுபட்டிருக்க வாய்ப்ப


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத