புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அரசியலும் சிவில் சமூகமும்

அரசியலும் சிவில் சமூகமும் என்கின்ற இந்நூலானது சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு பார்வை, அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை என்கின்ற ஐந்து தலைப்புக்களில் கட்டுரைகளினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரை கள் அனைத்தும் அரசறிவியலினை ஒரு பாடமாகக் கற்கின்ற மாண வர்களுக்கு பயன்மிக்கதாகத் துலங்கும் என்பது எனது எதிர்பார்க்கை. இந்நூலினை வடிப்பதில் என்னை உந்திய புறச்சூழ்நிலைகளாக எனது பட்டப்படிப்பின்போது வரிவுரையாற்றிய பெறுமதிமிக்க விரிவுரையாளர்களது விரிவுரைகள், இறுதி ஆண்டின் எனது ஆய்வுக் கட்டுரையும் அது தொடர்பான வாசிப்புக்களும், அரசறிவியல் பாடப்பரப்பு தொடர்பான எனது ஈர்ப்பு போன்றன செல்வாக்கு செலுத்தியுள்ளன. 
அரசறிவியல் பாடப்பரப்பானது மிகவும் விசாலமானதும் ஆழமானதுமான ஒன்று. இவற்றில் சில தலைப்புக்களினை தெரிவு செய்து அவற்றின்பால் நூலாக வடிவமைத்துள்ளேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க எனது சிறுதுளியான இம் முயற்சி எனது அரசறிவியல் துறைக்கும், அரசறிவியல் பாடப் பரப்புக்கும் வலுச்சேர்க்கும் என்பதனை இட்டு மனநிறைவடை கின்றேன். 
இந்நூலினை எழுதுவதற்கு என்னைப் பின்நின்று இயக்குவித்த சில பெறுமதிமிக்க நபர்களினை இங்கே சுட்டுவது பொருத்தமான ஒரு இங்கிதம். அந்த வகையில் எனது பலவீனங்களினைக் களைந்து என்னை ஒரு முழுநிறைவான மனிதனாக உருவாக்குவதில் கரிசனையுடன் செயற்பட்டு வருபவரும் எனது முன்னேற்றத்தினையிட்டு மகிழ்ச்சி காண்பவரும


தி.செல்வமனோகரன்
Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க ம