புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கதைக் கோலங்கள்

கதைக் கோலங்கள் என்னும் இந்நூலில் நாற்பத்தைந்து கதைகள் இடம்பெறுகின்றன. இவற்றில் சில தத்துவங்களை வெளிப்படுத்துவதற்காக சமகாலச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டவை. சிலகதைகள் மிருகங்களை வைத்துத் தத்துவங்களை சொல்வதாக எழுதப்பட்டவை. இதில் வரும் சில கதைகள், ஆங்கில மொழிக் கதைகளை மீள் உருப்பெறச் செய்துள்ளேன். இன்னும் சில மொழிபெயர்ப்புக் கதைகளாக அடங்குகின்றன. 
குறிப்பாக பைபிளில் வரும் ஆன்மீகத் தத்துவங்களை விளக்கும் கதைகளாகவும் எழுதியுள்ளேன்.  கதைக் கோலங்களில் வரும் கதைகளை பொருள், மொழி, நடை என்பவற்றைக் கொண்டு சிறுவர்களுக்கான பகுதியாகவும், வளர்ந்தோருக்கான கதைகளாகவும் வகுத்து வைத்துள்ளேன். எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எனது முதல் ஆக்கமாக இது வெளிவருகிறது. 
இந்நூலினை உருவாக்க எனக்கு அரிய ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் கொடுத்த ஏ.எஸ். முனைவர் பேராசிரியர் சபா.ஜெயராசா, டாக்டர் சு.மகாலிங்கம், கலாபூஷணம் சு.துரைசிங்கம், திரு.தெ.மதுசூதனன் ஆகியோருக்கும் முகப்புப் படத்தினை வரைந்து தந்த ஓவியர் கனிவுமதி, உள்படங்கள் வரைந்துதவிய ஓய்வுநிலை அதிபர் வே.சண்முகராசா (சண்) மற்றும் தங்கள் வெளியீடாகவே வெளியிடும் சேமமடு பொத்தகசாலை அதிபர் சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரியன. 

வி.அரியநாயகம்


சி.விஜயகுமார்
Vijayakumar, S

இந்நூலாசிரியர் சின்னத்துரை விஜயகுமார்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டம்  பெற்று அங்கு முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி கற்கைநெறியில் முதல்தர சித்தி          பெற்றதோடு அதன் பின்னர் சென்னைப் 
பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தினை அதிவிசேட தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

இவரது இந்நூல் நுண்பாக கோட்பாடுகளை கணிதம் 
மற்றும் வரைபட உதவியுடன் மிகத் தெளிவாக 
விளக்கியுள்ளதுடன் பருநிலைப் பொருளாதாரக் 
குறிக்கோள்களின் விமர்சிப்பாகவும் பயன்தரும் முறையில் கையாளப்பட்டுள்ளது. கெயின்சியவாதம், அதனைத் தொடர்ந்த நாணயவியல்வாதம் என்பவற்றின் கருத்துக்கள் நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளன. அவைபற்றி ஆசிரியர் காத்திரமான முறையில் விளக்கி 
ஆராய்ந்துள்ளார். கலப