புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பலஸ்தீனம் : ஒரு சமகால நோக்கு

இரண்டாம் உலக மகாயுத்தத்திலிருந்து இன்றுவரை பிரச்சி னைகள் மலிந்த உலகின் பிராந்தியங்களில் முதலாவதும், முக்கிய மானதுமான பிராந்தியமாக மத்திய கிழக்கு இருந்து வருகின்றது. மத்திய கிழக்கு நெருக்கடியானது அரபு - இஸ்ரேல் பிரச்சினையாக இருப்பினும் அதன் குவிமையமாக இருப்பது பலஸ்தீனப் பிரச்சினை யேயாகும். இதனைக் கருவாகக் கொண்டு 'பலஸ்தீனம் : ஒரு சமகால நோக்கு' என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலானது முடிவின்றி நீடித்துவரும் முறுகலான பிரச்சினைக்குப் புதிய பார்வை யையும், அணுகுமுறையையும் முன்வைக்க முற்படுகிறது.
மேற்குத்தேச அரசியல் தலைமைத்துவங்கள் நிலையூன்றிய நலன்கள் (Vested Interests) வயப்பட்டு பலஸ்தீனப் பிரச்சினையில் எப்போதும் பக்கச் சார்பான நிலைப்பாடுகளையே மேற்கொள்வதும், அதற்குப் பக்கபலமாகவே அந்நாடுகளின் ஊடகங்களும், நூல்களும், ஆய்வேடுகளும், சஞ்சிகைகளும் கருத்து வெளியிடுவதும் வெள்ளி டைமலை. 'புத்திஜீவிக் காலனித்துவம்' (Intellectual Colonialism) என்பதனை இனங்கண்டு, 'சமூக விஞ்ஞானங்களைக் காலனித்து வத்தின் பிடியிலிருந்து விடுவித்தல்' (Decolonization of social Science) என்ற துணிகரமானதும் சவால்கள் நிறைந்ததுமான முயற்சியை மூன்றாம் உலகைச் சேர்ந்த விழிப்படைந்த சில அறிஞர்கள் தமது மாற்றுக் கருத்துக்கள் வாயிலாகக் கணிசமான அளவில் முன்னெ டுத்து வருகின்றனர். அத்தகைய வரலாற்று முயற்சியைப் பிரதிபலிப் பதாகவும், பலப்படுத்துவதாகவும் இந்நூலின் வருகை அமைந்துள் ளது எனலாம். அவ்வகையில் பலஸ்தீன ஆய்வு தொடர்பாக ஏற் கனவே இருந்துவரும் சீரற்ற பாதையைத் தகர்த்தல் (Path - Breaking)  என்பதும் பதிலாகப் புதிய பாதையைச் சமைத்தல் (Path - Making) என்பத


தை.தனராஜ்
Thanaraj, T

தையல்முத்து தனராஜ் மாணவ ஆசிரியராகத் தனது கல்விப் பணியினை ஆரம்பித்தவர். தொடர்ந்து ஆசிரியர் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்கள் பெற்றுத் தனது தகுதியை, ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். பன்னாட்டு கல்விசார் பயிற்சிகளிலும் கல்வி மாநாடுகளிலும் பங்குபற்றியவர். 

இன்று கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், வளவாளராகவும், ஆய்வாளராகவும் பரிணமித்து வருபவர். கற்றல், தேடல், ஆய்வு என்பதை தனது பண்புசார் கோலங்களாக வெளிப்படுதுபவர். தமிழ்மொழி மூலமான கல்விச்சூழல், புலமைத்துவம் தொடர்பான அகல்விரி சிந்தனைகளையும், விமரிசனங்களையும் மற்றும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்.