புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பொருளாதார அபிவிருத்தி : சிங்கப்பூர் இலங்கை

அணிந்துரை
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்வரத்தினம் சந்திரசேகரம் அவர்களினால் எழுதப்பட்ட ‘பொருளாதார அபிவிருத்தி: சிங்கப்பூரும் இலங்கையும் அரசியற் பொருளாதார ஒப்பியல் நோக்கு” எனும் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 
 
கலாநிதி சந்திரசேகரம் எமது பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறி 1999 இல் உதவி விரிவுரையாளராக இணைந்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டம் பெற்றவர் பின்னர் 2004 இல் மக்கள் சீனக்குடியரசிற்கு புலமைப்பரிசில் பெற்று சென்று அங்குள்ள புகழ்பெற்ற குவாசோங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (HUST)  2008 இல் ‘இலங்கையில் பொருளதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்குமான சமூக அரசியல் காரணிகள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் அவரது இந்த ஆய்வுக்கட்டுரை ஜேர்மனியில் உள்ள புகழ்பெற்ற Lambert கல்வி வெளியீட்டு சமூகத்தினால் நூல் வடிவம் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
கலாநிதி சந்திரசேகரத்தின் அரசியல் பொருளியல் துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பல உலகின் புகழ்பெற்ற ஆய்வுச்சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளது. அத்துடன் பல்வேறு நாடுகளின் சர்வதேச ஆய்வரங

தி.செல்வமனோகரன்
Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க ம