புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

காலை நேரக் கதைகள்

மானம்பூத் திருவிழா எங்கள் ஊரிலே மிகச் சிறப்பாக நிகழும். ஊர் முழுவதுமே அன்று விழாக் கோலம் கொண்டிருக்கும். வீதிகள் சுத்தம் செய்யப்படும். வீட்டு வாயில்கள் அலங்கரிக்கப்படும். மாவிலை தோரணங்கள் மலர்ச் சரங்கள் முதலியவற்றால் அலங்கரிப்பு நிகழும்.
அந்தி மாலையில் சிவகாமி அம்மையின் மானம்பூ ஊர்க் கோலம் ஆரம்பமாகும். கந்தசாமி கோயிலை நோக்கி ஊர்க் கோலம் வரும். அங்கே வாழை வெட்டு முடிந்ததும் மீண்டும் சிவகாமி அம்மை தமது ஆலயத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி இடம்பெறும்.
ஊர்க் கோலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம், கும்மி, கோலாட்டம், முகமூடியாட்டம் என்றவாறு பல்வேறு ஆடல்கள் இடம்பெறும். 
சீனடி, சிலம்படி, தீக்குதிர் விளையாட்டுகள் தொடர்ந்து  இடம்பெறும்.
அம்பாளின் முன்னதாக தவில் நாகசுர வித்துவான்கள் வாசிப்பை நிகழ்த்துவர். அம்பாளின் பின்புறத்தே இனிய பஜனைப் பாடல்கள் நிகழ்த்தப்படும். 
கலைத்துவம் நிரம்பிய பெரிய ஊர்வலமாக அது இடம்பெறும். பல்வகைச் சுவை நிரம்பிய பண்பாட்டு ஊர்வலமாக அது அமையும். 
வழி நெடுகிலும் சிற்றுண்டிகள் அனைவருக்கும் வழங்கப்படும். தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும். 
எங்கும் ஒரே குதூகலமாக இருக்கும். குதிரை வாகனத்தில் ஏறி அம்பாள் வரும் காட்சி கொள்ளை இன்பமாயிருக்கும். 
சிவகாமி அம்மை வீதியுலா வந்துகொண்டிருந்தார். தெருவோரமதிற் கரையில் நின்ற ஒரு விறுவன் மிகுந்த இங்கிதத்தோடு இந்தப் பாடலைப் பாடினான். 
ஆலவட்டம் சூழவரும்
    அங்கயற் கண்ணி
அழகு மலர் சூடிவரும்


க.குணராசா ( செங்கை ஆழியான் )
Kunarasa, K

கந்தையா குணராசா ஈழத்துத் தமிழ் இலக்கியச் சூழலில் செங்கை ஆழியான் ஆக அடையாளம் காட்டுபவர். இவர் சிறுகதை, நாவல், ஆய்வு, தொகுப்பு எனப் பன்முக்க் களங்களில் இயங்குபவர். இவரது படைப்பாளுமையால் மிக வெற்றிகரமான எழுத்தாளர் எனும் அந்தஸ்துக்கு உரித்தானவர். 1960களின் நடுப்பகுதியில் இருந்து இன்றைய காலம்வரை செங்கை ஆழியான் பெயரைத் தவிர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படமுடியாது.

இவர் தொகுத்த மறுமலர்ச்சிக் கதைகள், ஈழகேசரிக்கதைகள், முன்னோடிச் சிறுகதைகள் போன்றவை ஈழத்துச் சிறுகதை வரலாற்றை மீள் வாசிப்புக்கு உள்ளாக்கும் விமரிசனப் பண்புகள் கொண்டவை. இத்தொகுப்பு முயற்சியில் இவர் ஈடுபட்டதன் மூலம் இலக்கிய வரலாறு எழுதியலுக்குப் புதுவளம் சேர்க்கின்றார். இதன் பிறிதொரு அடையாளமாகவே ஈழத்துத் தமிழ் சிறுக