புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

பௌதிகப் புவியியல்:புவியின் அமைப்பும் அகச்செயன்முறையும்

புவியானது இன்று வானவெளியிலிருந்து அவதானிக்கப்படுவது மட்டுமன்றி அதன் சமுத்திரத் தரைகள், தரையுயர்ச்சி மற்றும் அமைப்புக்கள் என்பவற்றையும் மிகத்தெளிவாக அவதானிக்கும் அளவிற்கு விஞ்ஞான ரீதியாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புவியின் தோற்றம் அதன் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்வதற்கான எமது திறன்கள் விருத்தியடைந்துள்ளதுடன் புவியின் வடிவமைப்புக்குக் காரணமான சக்திகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஓர் இயக்கவியல் தொகுதியாக பூமி எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எரிமலைகள், புவிநடுக்கங்கள், மலையாக்கம், கண்ட நகர்வு என்பன புவியின் உட்பகுதி வெப்பத்தின் வெளிப்பாடெனத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் புவியினைப் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. பௌதிகப் புவியியலுக்கான ஓர் அறிமுகத்துடன் ஆரம்பமாகும் இந்நூலின் உள்ளடக்கத்தில் புவியின் உட்பாகம், கனிப்பொருட்களும் பாறைகளும், கண்ட நகர்வு, எரிமலைகளின் செயற்பாடுகள்; அவற்றினால் உருவாக்கப்படும் நிலவுருவங்கள், புவிநடுக்கங்கள் மற்றும் வானிலையாலழிதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
புவியியல் பாடத்தினைப் பரீட்சை நோக்கிலன்றி, அதனை ஆழமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தரமான நூல்களின் பற்றாக்குறை முக்கியமானதொரு குறைப


க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம