புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

குழந்தை உளவியலும் கல்வியும்

பேராசிரியர் சபா.ஜெயராசாவின் ஆக்கங்களுள் தனிச்சிறப்பு மிக்க நூலாக 'குழந்தை உளவியலும் கல்வியும்' அமைகின்றது. 
குழந்தை உளவியல், குழந்தைக் கல்வி, குழந்தை வளர்ப்பு முறை முதலாம் துறைகளிலே பரவலான ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. வளர்ந்த நிலையில் ஏற்படும் விலகல் நடத்தைகளுக்கும் இடர்களுக்கும் குழந்தை நிலை வளர்ப்பில் நிகழ்ந்த தவறான அணுகுமுறைகளும் ஆதரவு இன்மையுமே முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. 
இன்று சிறுவர்க்குரிய கல்வியில் அழுத்தங்களும் திணிப்புக் களும் மேற்கொள்ளப்படுவதால் எதிர்ப்பாராத பின்னடைவுகள் வளர்ச்சிப் பருவத்தில் நிகழ்ந்த வண்ணமுள்ளன. 
அதேவேளை முன்பள்ளிகளும் பெருமளவிலே கவனிப்பாரற்ற நிலையிலே இயங்கிய வண்ணமுள்ளன. அரசாங்கம் ஆரம்பக் கல்வியில் செலுத்தும் ஊன்றிய கவனம் போன்று முன்பள்ளிகளிலே செலுத்துதல் இல்லை. நாட்டம் கொள்வதுமில்லை. 
மேற்கூறிய எதிர்மறையான சூழலிலே சிறார் பற்றிய தெளிந்த புலக்காட்சியை ஏற்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான அணுகு முறைகளை முன்னெடுப்பதற்கும் பயனுள்ள ஆக்கமாக இந்நூல் அமைகின்றது. தமிழ் மரபுகளையும் உள்வாங்கிய அனைத்து விடயப் பரப்புக்களையும் உள்ளடக்கிய நூலாக இது கட்டமைப்புச் செய்யப் பட்டிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 
முன்பள்ளி ஆசிரியர்கள் தாமாகக் கற்று தமது வாண்மையை மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் பெற்றோர் உளவியல் நிலையிலே தமது பிள்ளைகளை அணுகி முழுநிறைவான வளர்ச்சியை அறிகை ஆட்சி, எழுச்சி ஆட்சி, உடலியக்க ஆட்சி ஆகிய துறைகளிலே ஈட்டிக்கொள்வதற்கும் இந்நூல் பயன்மிக்க ஆக்கமாகி


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத