புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அரசறிவியல் : ஓர் அறிமுகம்

2011ம் ஆண்டில் அரசியல் விஞ்ஞானத்தினை க.பொ.த உஃத பரீட்சைக்கு ஒரு பாடமாகத் தோற்றும் மாணவர்களுக்கும் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையும். 2011ல் க.பொ.த உஃத பரீட்சைக்கு தோற்றும் மாணவர் களுக்கு 2009ம் ஆகஸ்ட் மாதத்தில் அரசியல் விஞ்ஞான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் தேர்ச்சி மைய (ஊழஅpநவநnஉளை டியளநன) பாடத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சிகளை வகுப்பறை யொன்றில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக அவற்றை தேர்ச்சி மட்டங்களாக வகைப்படுத்தியுள்ளார்கள். 
பிரதானமாக 16 தேர்ச்சிகளையும் அத்தேர்ச்சிகளுக்குரிய 35 தேர்ச்சி மட்டங்களையும் 2011ல் க.பொ.த உஃத மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்ச்சி மட்டத்திற்குமான பாட உள்ளடக்கங்களும் அப்பாட உள்ளடக்கங் களை எக்காலப் பகுதியில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற பாட வேளைகளும் பாடத்திட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் ஒருவர் வகுப்பறையொன்றில் தேர்ச்சி மட்டங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனை அடைவதற்கு துணை புரியும் வளவாளராக செயற்பட எதிர்பார்க்கப்படுகின்றார். வேறு வகையில் இதனைக் கூறினால் பாடத் தேர்ச்சிகளை (ளுரடிதநஉவ ஊழஅpநவநnஉல) பிள்ளைகள் அடைந்துகொள்வதற்கான கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செயலொழுங்குகளை புதிய பாடத்திற்கு ஏற்றாற் போல் திட்டமிட்டுக் கொள்ளுதல் மிக மிக அவசியமாகின்றது. எனவே ஆசிரியர் புதிய சவால்களை எதிர்நோக்க வேண்டியவரா கின்றார். 
மேலும், புதிய பாடத்திட்டத்தில் சமகாலத்தில


முகிலன்
Mukilan

        உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 
வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       என்று சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       என்பதிலும் சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். 
மரபார்ந்த சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார