புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்

'இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள்' எனும் இந்நூல் பல்வேறு காலப்பகுதிகளில் ஆசிரியரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பாக வெளிவருகின்றது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் அதுவும் பெருமளவுக்கு நவீன காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றி இந்நூல் பேசுகின்றது. அவ்வாறான கருப்பொருட்களாக இலங்கையில் தேசக்கட்டுமானம், இலங்கைத் தமிழர் தேசியவாதம், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், இருபதாம் நூற்றாண்டு இலங்கையில் இந்துமதத்தின் வளர்ச்சிப் போக்குகள், இலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள், பிரித்தானியர் ஆட்சியில் நல்லூரை மையமாகக் கொண்ட ஈழத்தமிழரின்அடையாளங்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் என்பன அமைந்துள்ளன. 
இலங்கைத் தமிழரின் வரலாற்று ஓட்டத்தினை அறிய விரும்பும் ஒருவருக்கு பயனுள்ள பல தகவல்களை வழங்குவனவாக இக்கட்டுரைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பன்மைச் சமூகங்களைக் கொண்ட இலங்கைத் தீவில் பெரும்பான்மைச் சிங்கள சமூகமும் இதன் அரசியல் தலைவர்களும் தம் தனித்துவத்தை, அடையாளத்தை நாடு பூராவும் நிலைநாட்ட எடுத்த முயற்சிகளின் எதிர்ச் செயற்பாடுகளைக் காட்டுவனவாகவும் இவை அமைந்துள்ளன. அத்துடன், தேசக்கட்டுமானத்தை, தேச ஒருங்கிணைப்பை பெரும்பான்மை சமூகத்துள் சிறுபான்மை சமூகத்தவர் ஒன்றிணைந்து போதல் (யுளளiஅடையவழைn) என தவறாக பெரும்பான்மைச் சிங்கள, பௌத்த சமூகத்தவர் கருதி செயற்பட்டதனையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரைகள் பலவும் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறான ஒரு நூலை வெளி


சு.சுசீந்திரராஜா
Suseendirarajah, S Prof

சுவாமிநாதன் சுசீந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியில் மற்றும் ஆங்கித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் 1960 இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். 

இவர் மொழியியல் கற்கையில் ஆழமும் விரிவும் மிக்க புலமையாளர். இத்துறைசார் கல்விப் புலத்தின் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவர் மரபுவழி இலக்கணக்கூறுகளோடு நவீன மொழியியல் கருத்துக்கையும் இணைத்து தற்கால தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை ஆராயும் பண்பு கொண்டவர். மொழியல் புலமைவழி நின்று தமிழியலை நோக்கும் புது மரபுக்கு தடம் அமைத்திருப்பவர். தமிழ் இலக்கணம் கற்கு