புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

செவ்வாய் மனிதன்

ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் மு.பொன்னம்பலம் முக்கியமான ஆளுமை. இவர் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர். 

மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற் கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை நல்கி வருகின்றார். சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும் கலைஞர் அல்ல இவர். மாறாக சிறுவர்களின் உளவிருத்தி, சிந்தனை மட்டம், படைப்பாக்க உந்துதல் முதலானவற்றின் அம்சங்களையும் கருத்தில் எடுத்து சிறுவர்கள் நிலை நின்று அவர்களுடன் ஊடாடும் எழுத்து மரபை உருவாக்குவதில் அதிகம் அக்கறை காட்டுபவர். இத்தன்மைகளை அடையாளம் காட்டும் படைப்பாக்கமாகவே ‘செவ்வாய் மனிதன்” அமைகின்றது. 
 
எமது சமூகப் பண்பாட்டு அசைவியக்கத்தின் அறிவு, ஆற்றுகை மரபுகளையும் உள்வாங்கி மீறவேண்டிய இடத்தில் மீறி புதிதாக கிளைவிட்டு புதிய மனிதர்களுக்கான புதிய விழுமியங்களையும் ம

க.சி.குலரத்தினம்
Kularatnam, C.S

ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் பல்துறை ஈடுபாட்டாளராக விளங்கியவர் க.சி.குலரத்தினம் ( 1916 - 1993 ). இவர் மரபு நவீனம் வழிவந்த மருகளை உள்வாங்கியவர். சைவாசிரியர் கலாசாலை மரபிலும் திளைத்தவர். தொடர்ந்து கால்நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப்பணி புரிந்தவர். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமல்ல தொடர் ஆய்வு முயற்சிகளிலும் தீவரமாகச் ஈடுபட்டவர். செந்தமிழ் வளர்த்த செம்மல்கள், சைவம் வளர்த்த சான்றோர்கள், தமிழ் தந்த தாத்தாக்கள் போன்ற மூலம் ஈழத்துத் தமிழ் மரபின் தளமும் வளமும் பற்றிய தேடுகைக்கான ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் மீளுருவாக்கம் செய்தவர். நோத் முதல் கோபல்லா வரை என்னும் தூல் மூலம் வரலாற்று அரசியல் இணைப்புக்களை ஆய்வு ரீதியில் விளக்க முற்பட்டவர். அதன்மூலம் தமிழுணர்வு முகிழ்ப்பின் தோற்றப்பாடுகளையும் அடையாளம் காட்டியவர். இந்து நாகரீகம் தந்து இந்து ம