புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வித்தியின் இலக்கிய மூன்னீடுகள்

முன்னுரைகள் பற்றிய ஆய்வுகளின் தொடர்ச்சி அதனைத் தனித்துவமான ஒரு இலக்கிய வடிவம் என்ற நிலைக்கு மேலுயர்த்தியுள்ளது. ஆழமான முன்னுரைகள் வெறுமனே அறிமுகக் குறிப்புக்களாக மட்டும் அமைந்துவிடுதல் இல்லை. பல்வேறு கலைப் பரிமாணங்களின் செறிவும், திறனாய்வு வீச்சுக்களும், வளமான எடுத்தியம்பல் முறைகளும் திறன்மிகு முன்னுரைகளின் இடம்பெற்றுள்ளமையைக் காணமுடியும். முன்னுரைகள் ஒருவகையில் கருத்து வினைப்பாட்டின்  (னுளைஉழரசளந) கட்டுச்செட்டான வடிவங்களாக அமைதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இவ்வகையில் பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரின் முன்னுரைகளின் தனித்துவங்களை வரைபுபடுத்த வேண்டியுள்ளது.
வரலாற்று நிலையிலும் தமிழியல் நிலையிலும் தனித்துவமான முன்னுரைக்கங்கள் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. தரப்பட்ட நூலியங்களை ஊடறுத்துச் செல்லும் அறிகை நிலையின் வெளிவீச்சுக்களாக அவை அமைந்துள்ளன. 
தமிழ் மரபில் முன்னுரை என்பது 'பொதுப்பாயிரம்' 'சிறப்புப் பாயிரம்' என இருதுறையாக எண்ணக் கருவாக்கம் செய்யப்பட்டது. பொதுப்பாயிரத்தில் நூலின் வரலாறும், நூலாசிரியர் வரலாறும், ஆசிரியன் பாடங்கூறும் வரலாறும், மாணக்கர் வரலாறும், மாணக்கரின் கல்வியறியும் வரலாறும் கூறப்படும், சிறப்புப் பாயிரம் நூலின் பெயர், நூல் வந்தவழி, நூலாசிரியர் பெயர், நூலின் பெயர், நூல் குறித்த பொருள், நூற்பயன் முதலியவற்றைக் குறித்து நின்றது.
மேலைப்புலக் கல்வியின் பரவல் மேற்குறித்த நிலைகளில் இருந்து முன்னுரைகளை இலக்கியக் கருத்துவினைப் பாட்டுத் தள


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத