புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நோத் முதல் கோபல்லவா வரை

கலாநிதி அ.ஜெயரத்தினம் வில்சன்
B.A (Hons) . ph.D
அரசியல் விரிவுரையாளர்
இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை
1796இல் பிரித்தானிய படைப்பற்றாட்சியுடனேயே உண்மையில் ஆரம்பமாகும் இலங்கையின் இக்கால வரலாற்றை எழுதுவோர், தம்முன்னுள்ள பணி இலகுவானதொன்றென்று எண்ணவொண்ணாது.  அஃது ஆட்சிமுறை (பரிபாலன) நடவடிக்கைகளின் அல்லது தனித்தனித் தேசாதிபதிகளின் சாதனைகளின் தொகுதி அன்று; அது, பொருளாதார முன்னேற்றம், கல்வி அபிவிருத்தி, சமுதாய வளர்ச்சி, அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஆகிய எல்லாவற்றினதும் சுருக்கமாகும். சுருங்கக்கூறின், இக்கால இலங்கை வரலாறு, சிதைவுற்றுக் கொண்டிருந்த சமுதாய அரசியல் அமைப்பு, இலங்கை ஒரே தீவு என்ற கருத்தினடிப்படையில் ஆக்கப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியில் விளைந்த பிண்டமாகிய தேசிய ஒருமைப்பாடாக வலுப்படுத்தப்பட்ட கதையேயாகும். பிரித்தானியரின் வரலாற்றேட்டில் (அ) ஒருங்கிணைக்கப்பட்ட தனி ஆட்சி முறை அமைப்பில், கண்டி மாநிலங்களை இணைத்த கோல்புறூக் கமறூன் விசாரணைக் குழுவின் முடிவுகளின் பின்னர் செயலாக்கப்பட்ட பரிபாலன ஒருமைப்பாடும், (ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதுவரை நாட்டின் ஏனைய பகுதிகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய தகுதி வாய்ந்த போக்குவரத்து வசதிகள் இல்லாமலிருந்த வடமாநில நகரங்களுக்கு உளதாய இருப்புப்பாதை இணைப்பும், அற்ப சாதனைகள் எனக் கருதப்படமாட்டா. இருப்புப் பாதைகள், ஏனைய இணைப்பு வழிகள், புதிதாயுள்ள இயற்கை வளவாய்ப்புத் தொகுதிகளைப் பொருளாதார சுபீட்சத்துக்குப் பயன்படுத்துதல், பரிபாலனச் சீர்திருத்தம் முதலிய அனைத்தும் சமுதாயக் கூட


சு.சுசீந்திரராஜா
Suseendirarajah, S Prof

சுவாமிநாதன் சுசீந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியில் மற்றும் ஆங்கித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் 1960 இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். 

இவர் மொழியியல் கற்கையில் ஆழமும் விரிவும் மிக்க புலமையாளர். இத்துறைசார் கல்விப் புலத்தின் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவர் மரபுவழி இலக்கணக்கூறுகளோடு நவீன மொழியியல் கருத்துக்கையும் இணைத்து தற்கால தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை ஆராயும் பண்பு கொண்டவர். மொழியல் புலமைவழி நின்று தமிழியலை நோக்கும் புது மரபுக்கு தடம் அமைத்திருப்பவர். தமிழ் இலக்கணம் கற்கு