புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியியலும் கணிப்பீட்டியலும்

நவீன கல்வி விருத்தியில் கணிப்பீடு ஒரு முதன்மை விடயமாக கருவியாக உருமாற்றம் பெற்று வளர்ந்துள்ளது. அதாவது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒரு அறிகை முறைமையாகவும் செயல்வாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளச்சிபெறத் தொடங்கியுள்ளது. ஒரு நிலையில் கணிப்பீடுதான் முழுமையான கல்வி அம்சமாகவும் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆனால் சாதாரண பொதுப்புத்தி மட்டங்களில் மாணவர் மதிப்பீடு என்பது கணித வாய்ப்பாட்டு அளவுக்குள் கணிப்பீடு குறுகி விடுகின்றது. 
இன்று கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் உரிய முறையில் கவனம் செலுத்தாது கணிப்பீட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. இதனால் கல்விச் சூழலில் கல்வி அம்சங்களை முழுமையாக அரித்துச் செல்லும் பாசிச ஆதிக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.. இந்தப் பின்புலங்களை நாம் தெளிவாக அறிந்து தெளிந்துகொள்ள வேண்டும். 
பொதுவாக கணிப்பீடு என்பது ஒரு கருவி. இதனை நேர்வழியிலும் பயன்படுத்தலாம், எதிர்நிலையாகவும் பயன்படுத்தலாம். இன்றைய சூழலில் இதனை எதிர்மறையாகப் பயன்படுத்தும் தவறான செயற்பாடுகளை அதிகமாக மேலோங்கி வருகின்றன. குறித்த ஒரு மாணவர் பாட அடைவுக் கணிப்பீட்டில் உயர்ந்த புள்ளிகளையும் வேறொரு மாணவர் குறைந்த புள்ளிகளையும் பெற்றால், குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவரை ஒட்டு மொத்தமாகத் 'தாழ்ந்தவர்' என்று கருதும் மனோபாவம் இடம்பெற்று வருகிறது. இது கணிப்பீட்டின் தவறான வழியில் காட்சி கொள்ளலாகின்றது. இவ்வாறே கருத்தாக்கமும் செய்யப்படுகின்றத


மு.பொன்னம்பலம்
Ponnambalam, M

1950களின் இறுதியிலிருந்து இன்றுவரை தீவிர இயக்கம் கொண்டவர். இவர் ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் முக்கியமான ஆளுமை. கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர்.
மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற்கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை வழங்க முடிகின்றது.
 
சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும்