புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும்

பிள்ளையைக் குவிமுகப்படுத்திக் கற்பிக்கும் எந்தவொரு நபருக்கும் உறுதுணையாக இருப்பது கல்வி பற்றிய உளவியலறிவு என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட விடயம். 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்' எனும் இந்நூல் முதற்பதிப்பாக 1997ஆம் ஆண்டு ஏழு இயல்களோடு வெளிவந்தது. இன்று 2011ஆம் ஆண்டு பன்னிரண்டு இயல்களாக விரிவடைந்து பதினான்கு ஆண்டுகளின் பின் ஐந்தாவது பதிப்பாக வெளிவருவதையிட்டு அக மகிழ்வடை கின்றோம். 
1999 - இரண்டாம் பதிப்பு - எட்டாவது இயல் - படைப்பாற்றல்
2003 - மூன்றாம் பதிப்பு  - ஒன்பதாவது இயல் - மொழிவிருத்தி 
2007 - நான்காம் பதிப்பு  - பத்தாவது இயல் - கற்றலின் தகவல்                     நிரற்படுத்தல் மாதிரிகை 
2011 - ஐந்தாம் பதிப்பு   - பதினோராம் இயல் - பல்வகை நுண்மதிகள் 
             - பன்னிரண்டாம் இயல் - மனவெழுச்சி நுண்மதி 
ஆகியவற்றோடு பன்னிரண்டு இயல்கள் அடங்கியதாக இப் புதிய பதிப்பு வெளிவருகின்றது. இது காலத்தின் மாற்றம் மட்டு மல்ல, அறிவுப் பெருக்கத்தின் மாற்றம் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. 
நான்காம் பதிப்பில் பத்தாம் இயல் 'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பதாகும். இந்த இயலோடுதான் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய கல்வியியலாளர் நண்பர் திரு.க.சுவர்ணராஜா அவர்கள் 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்'    நூலாக்கத்தில் இணைவு பெறுகின்றார். நான்காம் பதிப்பில் பத்தாமியலாகிய  'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பது ஐந்தாம் பதிப்பில் 'தகவல் முறைவழியாக்கல் மாதிரிகை' எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளதை


கவிஞர் துரையர்
Thuraisingam, S

கவிஞர் துரையர் என இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் அவர்களைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அறிவேன். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக உயர்ந்து வந்தவர் அவர். அவரது பதினாறாவது வயதில், சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி மாணவராக இருந்தபோது அவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்த இவர் 1972இல் தனது தெருவிளக்கு என்ற கவிதை நூலினை வெளிக்கொணர்ந்தார். சிறுவர் பாடல் தொகுதிகள் மூன்று சமயம் சார்ந்த நூல்கள்   மூன்று, புவியியல் சார்ந்த நூல்கள் இரண்டு ஆகியவை  இதுவரை வெளிவந்துள்ளன. கவிக்குரல்கள் என்ற  ஒலிப்பதிவு நாடாவும் இந்து தர்மத்தில் பத்துக்கள் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட இவரால் தயாரிக்கப்பட்டவை. இந்து தர்மத்தில் பத்துக்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள த