புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஆசிரியர் வாண்மையியல்

ஆசிரியர் வாண்மையியல் பற்றிய விரிவான நூல் ஒன்றின் தேவையை தொழிற்சங்கக் கருத்தரங்குகளிலே அவ்வப்போது தெரி வித்து வந்துள்ளனர். நாட்டின் கல்வி வளம் ஆசிரிய வாண்மை வளத்திலே தங்கியுள்ளது. ஆசிரிய வாண்மையின் நலிவு கல்வியின் நலிவாகவும் நாட்டின் ஒட்டு மொத்தமான மேம்பாட்டின் நலிவாக வும் மாற்றமுறும் இயல்பைக் கொண்டது. 
ஆசிரியர் மீதான அக்கறையை வளர்க்கும் அறிகைக் காட்சியை உருவாக்குதலே இந்நூலாக்கத்தின் சிறப்பார்ந்த இலக்காக அமைந் துள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மிகுந்த நெருக்கடிகளின் மத்தியிலேதான் ஆசிரியர் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். எதிர்மறையான அரசியல் தலையீடுகளுக்கும் உள்ளாக்கப்படு கின்றனர். 
அறிவின் பிரவாகத்தை உருவாக்குபவர்களும் அவற்றின் அறைகூவல்களை எதிர்கொள்பவர்களும் ஆசிரியர்களாக இருத்த லினால் அறிவுப் பொருளாதாரத்திலும் அறிவார்ந்த சமூகத்திலும் அவர்களின் வகிபாகம் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளது. 
மேற்கூறியவற்றின் எழுபுலத்தில் இந்நூல் ஆசிரியருக்கு முன்னீடாகத் தரப்படுகின்றது. இந்நூலாக்கத்துக்குத் துணை நின்ற நண்பர்களும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத