புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை

தகவல் தொழிற்துறையை முதன்மையாகவும் தகவலைப் பிரதான மூலவளமாகவும் கொண்ட தகவல் தொழினுட்ப யுகமொன்றில் உலகின் வளர்ச்சியடைந்த சமூகங்களுடன் விரும்பி இணைந்து அல்லது இழுபட்டு ஓடுகின்ற நிர்ப்பந்தத்தில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கல்விசார் உறுப்பினர்கள் நூலகவியலின் முக்கியத்துவத்தை உணரக்கூடிய வாய்ப்பை  மூன்றாவது ஆயிரியத்தின் நுழைவாயில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. 
ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நூலக தகவல் அறிவியல் என்னும் பொருட்துறை தவழும் பருவத்தில் நிற்கிறது என்பது அனை-வராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு உண்மை. ஈழத்து நூலகங்-களின் வரலாறு 20ம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தான் தொடங்குகின்றது என்றால் தமிழில் நூலகவியல் துறையின் ஆரம்பம் 1975இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட இலங்கை நூலகச் சங்கத்தின் டிப்ளோமாக் கற்கைநெறியுடன் தான் ஆரம்-பிக்கின்றது. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் தமிழக நூலக வரலாற்றுடன் தொடர்புபடுத்திப் பார்த்தாலும்கூட நூலகவியல் துறையின் வளர்ச்சியானது ஆங்கிலமொழிக்கு மேலும் வலுவூட்டக்கூடிய வகையில் தான் இன்றுவரை இருக்கிறது. கீழைத்தேய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர் இரங்கநாதன் என்ற தமிழ் அறிஞ-னின்  அறிவூற்று அனைத்தும் கூட இன்றுவரை ஆங்கிலமொழி வடிவிலேயே உள்ளது என்பதுடன் தமிழ்மொழி மாணாக்கனைப் பொறுத்து அவை அவனுக்கு கிடைக்கக்கூடிய வகையில் முயற்சி-கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தவகையில் தாய்மொழியில் கல்வியைத் தொடரும் மாணாக்கனுக்கு உதவக்கூடிய ஒரு முயற்சியாகவே 'நூலக தகவல் அறிவியல்  ஆய்வுக்க


தி.கமலநாதன்
Kamalanathan, T

திருநாவுக்கரசு கமலநாதன் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரிய கல்வியாளர் சேவையில் முகிழ்த்தவர். விரிவுரையாளர், உபபீடாதிபதி,  பீடாதிபதி எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி உயர்ந்தவர். கல்வியியல் கற்கையில் 'முனைவர்' பட்டம்  பெற்றவர். தனது சொல் செயலால் தன்னைத் தனியாக அடையாளம் காட்டியவர்.         கல்விச் சூழலில் காலத்தை வென்ற கமலமாகப் பூத்தவர். 

இவர் பெற்ற அனுபவமும் அறிவும் வளமானது.  இதுவே இவரை கல்வி அமைச்சில்  கல்விசார் தரவிருத்திக்கு மதியுரைஞராகவும் இருத்தியுள்ளது. தொடர்ந்து கல்வியியல்சார் சிந்தனைகளை ஆக்கமாகவும் வெளிப்படுத்திக்         கொண்டிருப்பவர். சமூக சமயப் பணிகளிலும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு 'வாழ்வின் அர்த்தம்' முழுமையடைய       இயங்கிக் கொண்டிருப்பவர்.