புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

உளவியல் முகங்கள்

சமகாலத்தில் அனைத்து நவீன அறிவுத் துறைகளிலும் ஊடாடி நிற்கும் அறிவியலாக உளவியல் மேலெழுந்துள்ளது. இது மேலும் ஓர் தனித்துவமான கற்கைப் புலமாகவும் விருத்தி பெற்றுள்ளது. 
இன்று வளர்ந்து விரிந்து வியாபித்து வரும் அறிவுத்துறைச் செயற்பாடுகளில் உளவியலின் தேவை மீள மீள வலியுறுத்தப்படுகிறது. ஆகவே, இத்துறையை வளம்படுத்தும் நூல்கள் தமிழில் அதிகம் வெளிவர வேண்டும். இது அவசியமானதும் கூட.
இத்தேவையை நிறைவு செய்யும் வகையிலும் உளவியல்சார் புலமைத்துவத்தை மாணவர்களுக்கு தெளிவாக கையளிக்கும் விதத்திலும் பேராசிரியர் சபா.ஜெயராசா முனைப்புடனும் பொறுப்புடனும் நிதானமாக இயங்கி வருகின்றார். இந்த அறிகைத் தொடர்ச்சியில் 'உளவியல் முகங்கள்' என்னும் நூலை பேராசிரியர் நமக்குத் தந்துள்ளார். 
மரபுவழி உளவியல் தொடக்கம் நவீன உளவியல் ஈறாக நாம் விளங்கிக் கொள்வதற்கான படிமலர்ச்சிகளை 'உளவியல் முகங்கள்' நமக்கு அடையாளம் காட்டுகின்றது. இன்று அறிவியலில் காண்கிற பெரும்பாலான சிந்தனைகளின் வித்துகள் தத்துவங்களில் உள்ளன. மனிதரைப் பற்றியும் மனிதர் தொடர்பான துறைகளைப் பற்றியும் தத்துவவாதிகள் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். அவற்றில் உள்ளம் பற்றிய சிந்தனைகள் சிறப்பிடம் வகிக்கின்றன. இவை உளவியலில் பல்வேறு புதிய போக்குகளை உருவாக்கி வருகின்றன. 
தற்போதைய கணிப்புப்படி பிளேட்டோவிலிருந்து 'உளவியல் சிந்தனை வரலாறு' தொடங்குகிறது. இது பின்னர் கிரேக்கத் தத்துவம் கடந்து ஐரோப்பிய தத்துவவாதிகளான காண்ட், பெர்க்கிலி, தெக்கார்த்தே, ஜான்லாக், கோபென்ஹர், நீட்சே முதலியோரைக் கடந்து வளர்ந்தது. இருபதாம்


சபா.ஜெயராசா
Jeyarasa, Saba Prof

பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் "கல்வியியல்" துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது "புலமைமரபு" எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.

இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்பு