புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

முதுசம்

'சிறுகதை வாழ்க்கையின் சாரளங்கள். வாழ்க்கையிலே ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை, அல்லது ஒரு சம் பவத்தை எடுத்துக் கூறுவது' என்கிறார் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன். 
'எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றை நான் ஒருபோதும் எழுதுவதில்லை' என்று உலகம் மதிக்கும் மக்கள் எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி கூறிய வாசகங் களை மனத்தில் நிறுத்தி எனக்குத் தெரிந்தவற்றைப் படைப்புக்களாக எல்லோரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் எழுதியுள்ளேன். 
'இலக்கியம் காலத்தின் கண்ணாடி' என்று சொல்வார்கள். சமுதாயத்தின் கண் நான் கற்றபாடங்கள் இன்றைய காலகட்டத்தின் அவசியம் கருதி அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்ற உந்துத லால், சிறுகதைத் தொகுதியாக வாசகர்கள் முன் வைத்துள்ளேன். 
இலக்கியம் பொழுதுபோக்குக் கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியதே இலக்கியம். 
உண்மையான கோரங்களை நான் தெரிந்துகொண்டிருக்கின் றேன். தினசரி வாழ்க்கையில் நிகழும் கோரங்களை நான் தரிசித்த வண்ணம் இருக்கின்றேன். நாம் வாழும் வாழ்க்கை கீழ்த்தரமான சாக்கடை வாழ்க்கை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித சமூகத்தை நான் அளவுகடந்து நேசிக்கின்றேன். என்றாலும் பிறருக்கு வேதனையளிக்க நான் விரும்பவில்லை. 
நாம் மானசிகமாக இருக்கக் கூடாதென்றும், அழகிய சொற் றொடர்களாலும், கவர்ச்சிகரமான பொய்களாலும் உண்மையை மூடிமறைக்கக் கூடாதென


துரைச்சாமி சிவபாலன்
Thuraisamy Sivabalan

துரைசாமி சிவபாலன் ( காந்தி ) யாழ்  / புங்குடுதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் துரைச்சாமி சிவபாலன் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ், புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களைக் கற்றுக் கலைப்பட்டதாரி பட்டம் பெற்றவர். ஆசிரியரான இவர் மன்னார் நானாட்டானிலும் சிலகாலம் வாழ்ந்தவர். இவர் புலம் பெயர்ந்து இத்தாலி-பலெர்மோ நகரத்தில் 1990 இல் வாழ்ந்தபோது "மழலை" எனும் கல் இலக்கிய மாநாந்த ச்ஞ்சிகையினை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து வெளியிட்டவர். அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். 

 
படந்த 12 ஆண்டுகளாக இங்கிலாந்தில் மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்துவரும்