புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

குயிலோசை

    காலையில் கதிரவன்
        கண் விளிக்க
    காலை புலர்ந்தது
        கதிரொளி பரந்தது

    காலையென்று அறியாமல்
        கன்துயில் கொள்ளலாமோ
    காலை விடிந்தது
        கண்விளித்து வாடி

    சேவல் கூவுது
        செந்தாமரை விரியுது
    கோயில்மணி அடிக்குது
        கூடிக்காகம் கரையுது

    பசுவும் பால் சொரியுத
        பசுக்கன்றும் துள்ளிக் குதிக்குது
    பசும்புல் நுனியில் தங்கிய
        பனித் துளியும் மறையுது

    பூக்கள் எல்லாம் விரியுது
        புதுமணம் எங்கும் பரவுது
    பாக்கள் தீட்டிய
        பாவலர் இருப்பது பாரடியோ.

    பஞ்சனையில் படுத்துறங்கியது போதும்
        பள்ளிச் சிறுவர் படிப்பதைக் கேளடி
    கொஞ்சமும் கூச்சம் இல்லாமல்
        குறட்டை விட்டுத் தூங்கலாமோடி 


எஸ்.அன்ரனி நோர்பேட்
Antony Norbert, S

சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் புவியியல் கற்கையின் சமகாலச் செல்நெறிகளையும் மாற்றங்களையும் உடனுக்குடன் உள்வாங்கி கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் புதிய நுட்பங்களை விருத்தி செய்து வருபவர். 

சமூக அறிவியல் துறைகளின் வளர்ச்சிகளை இற்றைப்படுத்திக் கொண்டு புதிய ஆய்வுக் கலாச்சார விருத்தியிலும் முனைப்புடன் இயங்குபவர். சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளிலும் ஆய்விதழ்களிலும் கட்டுரைகள் வழங்கி வருபவர். 

தமிழ்மொழி மூலமான புவியியல் கற்றைசார் புலமையின் விரிவாக்கத்திற்கு வளம் சேர்த்து வருபவர். இத்துறைப் பேராசிரியர்களின் வழித்தடங்களிலிருந்து மாறுபட்டு இயங்குபவர்.