புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சூழலியல் உளவியல் கலைவடிவங்கள்

சூழலியல் என்பது வளர்ந்து வரும் அறிவுத் துறையாகி மேலெழுகின்றது. பல்கலைக்கழகங்களில் அதன் பன்முகத் தன்மைகள் நோக்கிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகளாவிய முறையிலே ஆய்வு மாநாடுகளும், கருத்தரங்குகளும், அறிவுப் பரிமாற்றங்களும் இத்துறையில் நிகழ்த்தப்படுகின்றன.
சூழற் பாதுகாப்புத் தொடர்பான அரச நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கம் பெற்று வருதல் பிறிதொரு தோற்றப்பாடு.
சூழலியற் பாதுகாப்புத் தொடர்பான சட்டவாக்கங்களும் இடம் பெறுகின்றன.
சூழலியலின் பன்முகப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய நூல் ஒன்றின் தேவை உணரப்பட்டு இந்த ஆக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சூழலுடன் தொடர்புடைய உளவியல், சமூகவியல், பண்பாட்டியல், கல்வியியல், இலக்கியங்கள், திறனாய்வு முதலாம் துறைகளை உள்ளடக்கிய அகல் அடக்கல் நூலாக இது இடம்பெற்றுள்ளது.
-சபா.ஜெயராசா

 


கவிஞர் துரையர்
Thuraisingam, S

கவிஞர் துரையர் என இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் அவர்களைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அறிவேன். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக பின்னர் அதிபராக உயர்ந்து வந்தவர் அவர். அவரது பதினாறாவது வயதில், சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி மாணவராக இருந்தபோது அவரது முதலாவது கவிதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்த இவர் 1972இல் தனது தெருவிளக்கு என்ற கவிதை நூலினை வெளிக்கொணர்ந்தார். சிறுவர் பாடல் தொகுதிகள் மூன்று சமயம் சார்ந்த நூல்கள்   மூன்று, புவியியல் சார்ந்த நூல்கள் இரண்டு ஆகியவை  இதுவரை வெளிவந்துள்ளன. கவிக்குரல்கள் என்ற  ஒலிப்பதிவு நாடாவும் இந்து தர்மத்தில் பத்துக்கள் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட இவரால் தயாரிக்கப்பட்டவை. இந்து தர்மத்தில் பத்துக்கள் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள த