புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமூக வானொலி

சமூக அபிவிருத்திக்கான ஊடகத்தை வலுப்படுத்தல்
மக்கள் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அவர்களின் விருப்புக்களை பாதுகாத்து, மக்கள் தமக்குத் தேவை என்று கருதுகின்றவற்றை விடயப்பரப்பாகக் கொண்டிருக்கும், மக்களின் தொடர்பினை அதிகரிக்கச் செய்யும்; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நிகழ்ச்சிகளைப் படைக்கும்; சகோதர சமூகத்த வர்களின் வாழ்வியல் மீதான பரீட்சயத்தை அதிகரிக்கச் செய்யும்; சிறந்த மானிடப் பண்புகளை வளர்த்து, மக்களின் அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை நிகழ்ச்சிகளில் உள்ளடக்கி, அத்தகைய பிரச்சினைகளுக்கு உரியவர்களிடமிருந்து தீர்வுகளைத் தருவிக்கும்; பால், இன, மத பேதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி - தொடர்பாடல் நிகழ்ச்சிகளின் போது சகலருக்கும் சமவள வான வாய்ப்புகளை வழங்கும்; ஏகாதிபத்திய அல்லது சட்டவிரோத சக்திகளைவிட்டும் விலகிவாழும் பக்குவத்தையும் ஆற்றலையும் வளர்த்து வலுவான ஒரு சமுதாயத்தைத் தரிசிப்பதை இலக்காகக் கொள்ளும் ஒரு சமூக ஊடக நிறுவனமே சமூக வானொலியாகும். 
இலங்கையைப் பொறுத்தவரை, சமூக வானொலிக்கான தேவை உணரப்பட்டு சுமார் மூன்று தசாப்தங்களாகிவிட்டன. மகாவெலி சமூக வானொலித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்குள் இலங்கையின் சமூக வானொலிகள் குறிப் பிடத்தக்க அடைவுகளைச் சந்தித்திருக்கின்றன. 
கிராமிய மக்களின் வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும் வானொலி தனது தாக்கத்தைச் செலுத்தலாம் என்பதற்கு இலங்கை யின் ஆரம்பகாலச் சமூக வானொலிகளின் செயற்பாடுகள் சான்றாக இருந்துள்ளன. கள ஆய்வு, நேரடியாகச் சென்று நேயர்க


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.