புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

உலகக் கல்வி வரலாறு

உலகக் கல்வி வரலாறு  தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது ஆக்கமாக இந்நூல் அமைகின்றது. 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஆய்வரங்கில் இவ்வாறான ஒரு நூலின் தேவை கலந்துரையாடலின்போது வெளிவந்தது. குறித்த அமர்வு ஒன்றினுக்குத் தலைமை தாங்கிய வேளை என்னிடம் இக்கருத்து முன்வைக்கப்பட்டது.
உலகக் கல்வி வரலாற்றை ஒரு நூலில் எழுதி முடித்தல் மிகவும் கடினமான பணி. பிரபஞ்சத்தை ஒரு சிமிழுக்குள் அடைப்பதற்கு ஒப்பானது. உலகக்கல்வி வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்த முக்கியமான பதிவுகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 
கல்வி வரலாற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது, சமூகத்தின் பொருண்மியத் தளத்தினால் கல்விச் செயல்முறை உருவாக்கம் பெறும் இணைப்பைக் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. அதாவது சமூகத்தின் பொருண்மியத் தளத்தில் நிகழும் மாற்றங்கள் கல்வியாக் கத்தின் மீது நேரடியான செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன. 
அறிவுசார்ந்த வெளியீடுகளுக்கு உற்சாகமளித்துவரும் சேமமடு பதிப்பகத்தினரும் நண்பர்களும் நன்றிக்குரியவர்கள். 
சபா.ஜெயராசா

தமிழில் 'உலகின் கல்வி வரலாறு' தொடர்பான எந்தவொரு நூலாக்கமும் இதுவரை வெளிவரவில்லை. இதுவே இத்துறையில் வெளிவரும் முதல் நூலாகவும் முன்னோடி நூலாகவும்  அமை கின்றது. உலகக் கல்வி வரலாறு பல்வேறு தொகுதிகளில் எழுதப்படவேண்டிய பெரு நிலைப்பரப்பாகும். இந்நூல் அந்தப் பெரும் பரப்பைச் சுருக்கிச் சிமிழ் நிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்பணி மிகவும் சிக்கலானது. இத்தகைய பணியை நூலாசிரியர் துணிந்து மேற்கொண்டுள்ளமை பாராட்


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி