புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வி நுட்பவியல்

நாம் 'கல்வி நுட்பவியல்' என்பதற்குப் பரந்த முறையிலோ குறுகிய முறையிலோ பொருள் கொள்ளலாம். இருப்பினும் பொருத்தமான அறிவியல், தொழில்நுட்ப முறையியல், உளவியல், சமூகவியல், மொழியியல், கருத்துத்தொடர்பியல் போன்றவற்றில் எழுந்துள்ள புதிய கருத்துக்களையும் கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் பயன் படுத்த முற்படும் ஒரு பிரிவாகவும் கல்வி நுட்பவியலுக்கு பொருள் கொள்ளலாம். கருவிகளாகப் பயன்படுத்தல் கல்விநுட்பவியலுக்கு இன்றியமையாததது என்பதாக மட்டும் இவ்விளக்கம் கருதுவதில்லை. 
கல்வியின் நோக்கங்களை தெளிவுபடுத்த உதவும் கருத்துக்கள், இந்நோக்கங்கள் எய்த உதவும் நுண்முறைகள், இவற்றின் இயல்புகள், தேவைப்படும் முறைகளையும் துணைக்கருவிகளையும் தேர்ந்தெடுக்க உதவும் கோட்பாடுகள், கல்வி வசதிகளை நன்கு பயன்படுத்த உதவும் முகாமைத்துவ நுட்பங்கள், கல்வி விளைவுகளை திட்டவட்டமாக  கணிப்பிட மதிப்பிட உதவும் முறைகள் போன்றவற்றுடனும் கல்வி நுட்பவியல் தொடர்புள்ளதாகவே இப்பரந்த விளக்கம் குறிப்பிடுகின் றது. தொடர்ந்து கல்வியின் விரிவாக்கமும் சிந்தனையும் கல்வி நுட்ப வியல் சார்ந்த பொருள்கோடலை ஆழமாக்குகின்றது. 
சமகாலத்தில் 'கல்வி நுட்பவியல்' பற்றிய ஆய்வுகள் பல்வேறு பரிமாணங்களுடன் தொடர்புடையதாகவே விருத்தி பெறுகின்றது. குறிப்பாக, இன்றைய அறிவுசார் பொருளாதாரம் மற்றும் அறிவுசார் சமூகத்தில் கல்வி நுட்பவியல் மேலும் முக்கியத்துவமுடையதாகவே மாறுகின்றது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் தரமான கல்வி, அனைவருக்கும் தொடர்கல்வி போன்ற செயற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டுவரும் நிலையில் கல்வி நுட


சசிகலா குகமூர்த்தி
Sasikala Kugamoorthi

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்கள் கல்வித்துறையில் சுமார் மூன்று தசாப்தகால அனுபவத்தினைக் கொண்டவராவார். 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற இவர் ஆசிரியப் பணியில் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியில் தமிது சாதனைக்காக தங்கப்பதக்கத்துடன் கூடிய டிபளோமாவினையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுதத்துவமானி பட்டத்தையும் பின்னர் ஆசிய அபிவிருத்திவங்கியின் புலமைப்பரிசில் பெற்று தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.