புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்தியும்

சமகாலத்தில் கல்வியியல் எழுத்துகளின் ஆக்கங்களின் மறும் ஆய்வுகளின் முனைப்பு பல்பரிமாணங்களில் வெளிப்படுகின்றது. சமூக மட்டங்களில் கல்விசார் பிரச்சினைகளும் பல்வேறு கோலங்களில் விரிவுபெறுகின்றது. இதனால் கல்வியில் குவியப்படும் சிந்தனைகளும் வினைப்பாடுகளும் ஆய்வில் பண்புகளை தழுவியதாக மேற்கிளம்புகின்றது. 
இன்று கல்விப் பணிகளில் ஈடுபடக்கூடிய ஒருவர் புத்தாக்கச் சிந்தனைகளில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றத்தை உருவாக்கும்;;; மகிழ்ச்சிகரமான கல்விப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும். இதற்கு சமூகப் பொறுப்பும் சமூக உணர்வும் மற்றும் புலமைப் பயிற்சியும் வேண்டும். இந்த பின்புலத்தில்தான் முனைவர் தி.கமலநாதன் அவர்களது 'கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்திகளும்' எனும் நூல் வெளிவருகின்றது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சமகாலக் கல்விப் பரப்பில் எழுந்துள்ள நடைமுறைகளை விளங்கவும் விளக்கவும் முற்பட்டதன் விளைவாகவே உருவாகியுள்ளது எனலாம். இவை புதிய அறிவையும் புதிய அனுபவங்களையும் ஒன்றிணைத்து புதிய கல்விக் கோலங்களைப் படைக்கும் திறன் பெற்றதாகவே விரிவுபடுகின்றது. 
நூலின் மையமாக இழையோடும் சிந்தனைவீச்சி சமகால கல்விசார் பிரச்சினைகளை புதிய கோணங்களில் புதிய கலங்களில் பார்க்கத் தூண்டுகின்றது. இதற்கான அவசியத்தையும் வழியுறுத்துகின்றது. அறிவை அடித்தளமாகக் கொண்டு நமக்கான இருப்பியல் கேள்விகளை எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது. 
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் 'அறிவைத் திரட்டுதல்' என்னும் ஒழுகலாறு வகைப்பட்ட ச


ச.முத்துலிங்கம்
Muthulingam, S

பேராசிரியர் முனைவர் ச.முத்துலிங்கம் கல்வியியல் துறைசார் முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர். இவர் தமிழில் கல்வியியல் துறையின் விரிவுக்கும் ஆராய்ச்சிக்கும் புதுத்தடம் அமைத்துக் கொடுத்தவர். இன்று கல்வியியல் பன்துறை அறிகை மரபுகளின் குவிமுனையாக தமிழில் மேலெழுச்சி பெற்று வருவதற்கு தெளிவான சிந்தனைப் புலத்தையும் ஆய்வுக் களத்தையும் உருவாக்கி வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு கொண்டவர். கலவி உளவியல் எனும் பொருட்பரப்பில் ஆசிரிய மாணவர்களை முழுமையாக ஈடுபாடு கொள்ளவும் இச்சிந்தனைத் தொடர்ச்சியின் முளுமையை உள்வாங்கவும் சாதகமான சூழலை உருவாக்க முன்னின்று உழைத்தவர். இத்துறைசார் அடிப்படை எண்ணக்கருக்களை அறிக்கை மரபுகளை தமிழில் தெளிவாக எடுத்துரைக்கும் முறைமைக்குத் தடம் அமைத்தவர்.