புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

திருக்குறள்


அரசியலில் ஈடுபட விரும்புபவர்கள் கட்டாயம் இதில் கூறப்பெறும் அரசியல் நுட்பங்களைக் கற்றுணர்ந்து, ஆட்சியியலை அறிந்து, மக்கட்கு நலம் செய்யும் பயனுடைய ஆளுமையைச் செய்ய முயற்சி செய்ய இதனைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் அரசியல் நூல். 
சமநிலைப் பொதுவுடைமைப் பொருளியல் அமைப்பை மக்களிடம் ஏற்படுத்த விரும்புபவர்கள் இதில் கூறப்பெறும் பொருளியல் உண்மைகளை உணர்ந்து, அவற்றின்வழி தாங்கள் பொருளை ஈட்டவும், பேணவும், அதைப் பிறர்க்கும் பயன்படும்படியான பொதுமைப் பொருளியல் கொள்கைகளை வகுக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும் பொருளியல் நூல்.
சாதி, சமய வேறுபாடற்ற சமநிலைக்குமான அமைப் பை உருவாக்கவும், இக்கால் உள்ள ஏற்றத் தாழ்வான சமூக நிலைகளில் சீர்திருத்தம் செய்யவும் விரும்பும் சமூகப் பொதுநலத் தொண்டர்கள் இதனை அறக் கற்று, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளுக்கு இதன் கருத்துக்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள உதவும் சமூகவியல் நூல்.
முந்து தமிழினத்திற்குக் கடந்த மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்து இன்றுவரை நேர்ந்துள்ள அரசியல், பொருளியல், சமூகவியல், மொழியியல், இனவியல், கலையியல், பண்பாட்டியல், கல்வியியல், அறிவியல் முதலியவற்றில் நிகழ்ந்த வீழ்ச்சிகளையும், தாழ்ச்சிகளை யும், அறியாமைகளையும், மூடநம்பிக்கைகளையும் அற வே அகற்றுகின்ற மறுமலர்ச்சி இனநல, மீட்பு முயற்சி களுக்கும், அத்தகைய மீட்பர்களுக்கும் போராட்டக் காரர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் செவ்வையான வழிகாட்டும் இனநல மீட்பு நூல்.
இதில் கூறப்பெறும் கருத்துகள் அரசியல், பொருளியல், சமுதாயவியல் அமைப்புகளை மாற்றியமைத்


இரா.இளங்குமரன்
Illankumaran, Era

கடலொன்று கடல்கடக்கும் ஆயத்தங்கள்
கவின்அல்லூர் தனில்நிகழ்வ துண்மை யுண்மை;
மடைதிறந்த வெள்ளமதும் பின்னை ஓடும்
மாமேதை குறட்குமரர் வாய்தி றந்தால்;
கடைவிரித்துக் கொள்ளாமல் கட்டிக் கொண்டோர்
காசினியில் பலர்உருகும் இந்த நாளில்,
படைவென்றே ஊர்திரும்பும் பாங்கு பொங்கப்
பலருமிவர் குறளமுதம் பருகச் செல்வர்!

தளர்மனத்து இளைஞர்களைக் கவர்ந் திழுக்கும்
தலைவர்கள் இத்தரணிதனில் யாருமில்லை!
வளமான குறள்வேத வழிந டப்பின்
வாழ்வுசிறப் படையும் அப்பணிசெய் தற்கே
இளங்குமர அய்யாவே இருக்கின்றீர் நீர்