புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சூழலியல் உளவியல் கலைவடிவங்கள்

சூழலியல் என்பது வளர்ந்து வரும் அறிவுத் துறையாகி மேலெழுகின்றது. பல்கலைக்கழகங்களில் அதன் பன்முகத் தன்மைகள் நோக்கிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகளாவிய முறையிலே ஆய்வு மாநாடுகளும், கருத்தரங்குகளும், அறிவுப் பரிமாற்றங்களும் இத்துறையில் நிகழ்த்தப்படுகின்றன.
சூழற் பாதுகாப்புத் தொடர்பான அரச நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கம் பெற்று வருதல் பிறிதொரு தோற்றப்பாடு.
சூழலியற் பாதுகாப்புத் தொடர்பான சட்டவாக்கங்களும் இடம் பெறுகின்றன.
சூழலியலின் பன்முகப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய நூல் ஒன்றின் தேவை உணரப்பட்டு இந்த ஆக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சூழலுடன் தொடர்புடைய உளவியல், சமூகவியல், பண்பாட்டியல், கல்வியியல், இலக்கியங்கள், திறனாய்வு முதலாம் துறைகளை உள்ளடக்கிய அகல் அடக்கல் நூலாக இது இடம்பெற்றுள்ளது.
-சபா.ஜெயராசா

 


க.ஐயம்பிள்ளை
Aiyampillai, K

வளம் நிறைந்த வன்னிமண் தந்த பெருமகன் கந்தையா ஐயம்பிள்ளை. அரசபணியில் எழுதுநராக ஆரம்பித்து நிர்வாகசேவை வரை உயர்ந்தவர்.  கொழும்பு, திருகோணமலை எனப் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். 

வவுனியா சிந்தாமணி ஆலய அறங்காவலர் சபை, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், மணிவாசகர் சபை, தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் பொறுப்பான பதவிகளில் பொதுப்பணியாற்றிவர்.
 
கல்லூரி மாணவனாக அகில இலங்கை ரீதியிலான சைவசமயப் பாடப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றதன்மூலம் தங்கப்பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அருவி, எழுச்சி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் முத்திரை பதித்தவர்.