புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கிராமத்துக் கதைகள்

நாம் கதைகளால் நிரம்பிய உலகத்தில்தான் வாழ்கின்றோம். நமக்குக் கதையென்பது காலத்தின் தொல்வடிவங்களுள் ஒன்றாகும். நமக்குக் கதையைச் சொல்வதும் கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல் சார்ந்த உயிர்ப்பான தருணங்களாகும். நமது ஆத்ம ஈடேற்றத்தின் சடங்காக வாழ்முறைக்கான வளமான கூறுகளாக அடையாளம் காட்டும் களஞ்சியம்.  மானிட வாழ்வில் இந்தக் கதைகள் பண்டமாற்றம் போல் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்தப் பரிமாற்றம் பன்முக ரீதியில் இன்றுவரை தொடர்கிறது. 

கதை சொல்லலும் கேட்டலும் தொடர்ந்து கதை புனையும் பண்பையும் வளர்த்தெடுத்தது, கதையெழுதும் மரபையும் கண்டுபிடித்தது. ஆக கதைகள் நமது மகிழ்வுக்குரிய சாதனம். பொதுவில் கதைகள் எங்கும் நீக்கமற ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மானிட வளர்ச்சியின் உயிர்ப்புத் தளமாகவும் கதைக்களம் இடம்பெறுகின்றது. 
 
பன்னாட்டுப் பண்பாட்டு அடையாளமாகவும் கதைகள் நீட்சி பெறுகின்றது. கதையின் வழியே நமக்கான வாழ்வியல் மதிப்பீடுகள் கருத்தேற்றம் செய்யப்படுகின்றது. தனிமனிதனின் ஆசைகள் விருப்புகள், இரகசியங்கள், மகிழ்ச்சியின்மைகள், இயலாமைகள், தோல்விகள், வீரம், துணிச்சல், நகைச்சுவைகள் போன்றவைகள் கதைகள் வழியே பரிமாறப்படுகின்றன. இதைவிட சமூகத்தின் மீதான தனிமனிதனின் கோபம், இயலாமை மற்றும் அதிகாரத்தை மறைமுகமாக பரிகசிப்பது போன்றவையும் கதைவழியேதான் நமக்குச் சாத்தியமாகின்றன. இதனால்தான் சிறார்கள

சி.விஜயகுமார்
Vijayakumar, S

இந்நூலாசிரியர் சின்னத்துரை விஜயகுமார்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டம்  பெற்று அங்கு முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார். இவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி கற்கைநெறியில் முதல்தர சித்தி          பெற்றதோடு அதன் பின்னர் சென்னைப் 
பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தினை அதிவிசேட தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

இவரது இந்நூல் நுண்பாக கோட்பாடுகளை கணிதம் 
மற்றும் வரைபட உதவியுடன் மிகத் தெளிவாக 
விளக்கியுள்ளதுடன் பருநிலைப் பொருளாதாரக் 
குறிக்கோள்களின் விமர்சிப்பாகவும் பயன்தரும் முறையில் கையாளப்பட்டுள்ளது. கெயின்சியவாதம், அதனைத் தொடர்ந்த நாணயவியல்வாதம் என்பவற்றின் கருத்துக்கள் நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளன. அவைபற்றி ஆசிரியர் காத்திரமான முறையில் விளக்கி 
ஆராய்ந்துள்ளார். கலப