புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இசையும் சமூகமும்

பொதுவாக எங்கும் இசை இல்லாச் சமூகங்கள் எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. ஒரு நிலையில் இசையே மொழி, விஞ்ஞானம், தொன்மம், மதம் மற்றும் சங்கேத உத்திகள் அனைத்துக்கும் மூலமாக இருந்துள்ளது. 
தொல் சமூகங்கள் உணவுப் பொருள் சேமிக்கவும் வேட்டை-யாடவுமான கருவிக்கு அடுத்தபடியாக இசைக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கின்றன. மனிதர்களை ஒருங்கிணைக்கும் முறைமையில் இசைக்கருவிகள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. இசை எல்லோரது நினைவுகளிலும் நடத்தைக் கோலங்களிலும் சிந்தனையிலும் செல்வாக்கு வகிக்கின்றன. ஆக தனிமனித உணர்வு-களையும் மீறிய ஒரு சமூகப் படிமமாகவே இசை விளங்குகின்றது. இசை உணர்வுகள் சமூக இருப்பிலிருந்தே கிளர்ந்தெழுகின்றன. தொல் சமூகங்களது நீண்ட இருப்பு வன்முக இசை உணர்வுகளின் உருவாக்கத்துக்குக் காரணமாகிறது. இன்னொருபுறம் சில அடிப்ப-டையான வகைப்பாட்டுக்குள் அடங்கும் பண்புகளையும் கொண்-டுள்ளன. இது தொன்ம இசைக்கு மட்டுமன்றி நவீன இசைகளுக்கும் நன்கு பொருந்தும்.
இசையை நாம் பயன்பாட்டு இசை மற்றும் அழகியல் இசை என ஒரு பெரும் பிரிவுகளாக வகுத்து நோக்கலாம். பயன்பாட்டு இசை மதச் சடங்குகள் சமூகச் சடங்ககள் வாழ்வியல் சடங்குகள் இவற்றுடன் நேரடித் தொடர்புடையவை. இவற்றுடன் மாந்திரிகம், மருத்துவம், வழிபாடு உபாசனை என்பனவும் சேர்ந்து கொள்-கின்றன. மந்திரமும் சடங்குகளும் புராதன கிராமிய வாழ்க்கையின் அறிகைக் கோலங்களையும் வெளிப்படுத்தின. சமூக வாழ்வின் அத்தனை தருணங்களும் இசையின் துணையின்றி நடக்காது. இந்த நிலை தொல்சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும்


தி.கமலநாதன்
Kamalanathan, T

திருநாவுக்கரசு கமலநாதன் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரிய கல்வியாளர் சேவையில் முகிழ்த்தவர். விரிவுரையாளர், உபபீடாதிபதி,  பீடாதிபதி எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி உயர்ந்தவர். கல்வியியல் கற்கையில் 'முனைவர்' பட்டம்  பெற்றவர். தனது சொல் செயலால் தன்னைத் தனியாக அடையாளம் காட்டியவர்.         கல்விச் சூழலில் காலத்தை வென்ற கமலமாகப் பூத்தவர். 

இவர் பெற்ற அனுபவமும் அறிவும் வளமானது.  இதுவே இவரை கல்வி அமைச்சில்  கல்விசார் தரவிருத்திக்கு மதியுரைஞராகவும் இருத்தியுள்ளது. தொடர்ந்து கல்வியியல்சார் சிந்தனைகளை ஆக்கமாகவும் வெளிப்படுத்திக்         கொண்டிருப்பவர். சமூக சமயப் பணிகளிலும் தமிழ்ப்பணிகளிலும் ஈடுபாடு கொண்டு 'வாழ்வின் அர்த்தம்' முழுமையடைய       இயங்கிக் கொண்டிருப்பவர்.