புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் ( தொகுதி II )

தமிழியல்சார் சிந்தனைத் துளிகள், தொகுதி ஐ என்ற எனது நூலுக்கு, 2009ஆம் ஆண்டு நூலாசிரியர் உரை எழுதியபோது, இரண்டாவது தொகுதி என ஒரு நூலை வெளியிடும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்நூல், முதற்தொகுதியின் தொடர்ச்சி - தொகுதி ஐஐ. ஆதலால், அங்கு கட்டுரைகளின் தோற்றம் பற்றிக் கூறிய பொதுக் கருத்துக்கள், இங்கும் பொருந்தும். இந்நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள், தமிழில் உள்ள சொற்கள் பற்றியவை. அவை, கடந்த ஈராண்டுகளில், திட்டமிடாது, அவ்வப்போது தனித்தனியாக எழுதப்பெற்றவை. கட்டுரைப் பொருள்கள், தொடர்புடையவையாக இருக்கும் போதும், ஒரே பொருளை, வௌ;வேறு கோணத்தில் நோக்கி எழுதும் போதும், கூறிய கருத்துக்களை மீண்டும் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெரும்பாலும், கட்டுரைகளின் முன்னுரையிலே தான் கூறிய கருத்து மீண்டும் வருகிறது.
தமிழியல் பற்றி, நாள் இதுவரை எடுத்துரைக்கப்படாத கருத்துக்கள் எவ்வளவோ உண்டு. ஆய்வு வளர்ச்சிக்கு, தேடுவதும், தொகுப்பதும், வகுப்பதும், ஒப்புநோக்கிக் காண்பதும், சிந்திப்பதும், எழுதுவதும் இன்றியமையாதவை. தொகுதிகளைப் பெருக்கிக் கொண்டே போகலாம். அதற்கு, உடல் நலம், உளநலம், நினைவாற்றல் போன்றவை உதவ வேண்டும். இனி, எல்லாம் கடவுள் சித்தம் என இருப்போம்.
முன்னுரையோ அறிமுகவுரையோ இல்லாமல், நூல்கள் வெளியிடுவதில்லை என்பது, சேமமடு பதிப்பகத்தின் கொள்கை. இது, நல்ல கொள்கையென்றாலும், தகுதி வாய்ந்த அறிஞர் வாய்க்காதவிடத்து தர்மசங்கடமாகிவிடுகிறது. இன்று, நமது நாட்டில் நல்ல அறிஞர்களைக் கண்டுகொள்வது அரிது; இருப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். இந்நூலின் முதற் தொகுதிக்கு, ந


செ.சிவலிங்கம்
Sivalingam, S

ஈழநாட்டிலே கந்தப்புராண வசனந் தோன்றியுள்ளது. கந்தப்புராணத்திற்கு பல அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். நாமறிந்த வரையிலே கந்தப்புராணத்தைச் சுறுக்கிச் செய்யுலாகச் செய்த ஒரேயொரு தமிழறிஞர் பண்டிதர் சிவலிங்கம் அவர்களேயெனலாம்.
யாப்பறி புலவனான பண்டிதர் சிவலிங்கம் அவர்கள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அருகே வைத்து ஆராயப்பட வேண்டியவர். இறைபக்தியும் புலமை பாரம்பரியமுங் கொண்ட ஒருவராலேதான் இத்தகைய முயற்சியிலீடுப்பட முடியும். இந்த இரண்டும் பண்டிதர் சிவலிங்கத்திற்கு வாய்த்திருக்கின்றன. இவரின் செய்யுள்களை நோக்கும் போது இவர் '  ஆழ்ந்திருக்கும் கவியுளம்' கண்டவராக கணிக்கப்படுகின்றார். 
கந்தப்புராணம் என்னும் கடலை இலகுவாகக் கடக்க உதவும் படகாக இவரின் 'கந்தப்புராணச்சுறுக்கம்'  என்னும் நூல் அமைகின்றது. பண்டிதர் சிவலிங்கம் கவிதை கலை கைவந்தவர்  என்பதற்கு இந்நூல் ச