புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கலைகள் செய்வோம்

இதுவரை மு.பொன்னம்பலம் ஈழத்தின் நவீன கலை இலக்கியப் பரப்பில் பல்வேறு புத்தாக்கமான புதிய முயற்சிகளுக்கு களம் அமைத்துத் தந்தவர். தனது வாழ்நாள் முழுவதும் கலைகளுக்கும் தத்துவத்துக்கும் இடையில் உறவாடி சுயவிசாரணைகளை தன்னளவில் எழுச்சிக்கொள்ளச் செய்து அதற்கு வடிவம் கொடுப்பதில் மகிழ்வு கொண்டவர். 

இன்று மு.பொ பெரியவர்களுக்கு இலக்கியம் படைக்கும் முயற்சியிலிருந்து அவ்வப்போது விலகி சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்கும் வெளியில் மெய்மறந்து உலா வரும் சிறுவனாக ஆயகலைகள் படைக்கும் மனிதஜீவியாக வெளிப்பாடு கொள்கின்றார். இதன் அறுவடையாகவே ‘கலைகள் செய்வோம்” எனும் தொகுப்பு அமைகின்றது. 
 
கவிஞர் தானே களித்தல், கற்றல், வியத்தல் எனும் வகைமைப்பாட்டின் எல்லைகளைக் கீறி  அவற்றை  தானே அழித்து கலைகளின் முழு வடிவங்காண விளைகின்றார். தொடர்ந்து தன்னைத்தான் எழுச்சிகொள்ளச் செய்து துள்ளிக்குதித்து  தாண்டவமாடி பிரபஞ்சத்தின் வெளிகளின் ஓரங்களில் எல்லாம் நீந்தி விளையாடி மனவெழுச்சியின் பன்முகக் கூறுகளின் மோதுகைக்கு ஆட்பட்டு பின் நிதானித்து இயல்பாய் வெளிவரும் ஞானக்குழந்தைகளின் உருவாக்கத்திற்காக இந்நூலைப் படைத்துள்ளார்.
 
வாழ்க்கையின் மர்மங்களும் சுவாரசியங்களும் மாறுபட்ட புலக்காட்சிகளும் தன்னைத்தானே புரிந்த

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்
Thanabalasingam Krushnamohan

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் பல்கலைக்கழக ஆசிரியர் என்ற வகையில் அரசறிவியலுக்கோர் அறிமுகம், சமகால அரசியற் கோடபாடுகளும் பகுப்பாய்வும், மோதல் பற்றிய எண்ணக்கருக்களும், அரசியல் வன்முறையும், மோதல் கல்வியும் உலக அரசியலும், இலங்கையின் பொதுத் துறை நிர்வாகம், ஒப்பீட்டரசியல், சர்வதேச அரசியல் பற்றியகோட்பாடுகள் போன்ற கற்கை நெறிகளை பட்டதாரி மாணவர்களுக்குப் போதித்து அத்துறையின் பன்முக அறிவைத் திரட்டிக்கொண்டுள்ளார்.

இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பல்கலைக்கழக ஆசிரியராக, சமூகவிஞ்ஞானத் துறையின் தலைவராக, நூல்கள் மற்றும் கட்டுரை ஆசிரியராக, க.பொ.த(உ.த) பரீட்சையின் பிரதம பரீட்சகராகப் பணிபுரிந்து பல்வேறு அறிவையும், அனுபவத்தையும் பெற்றவர்.