புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

உளவியல் ஊடுதலையீடுகள்

உளவியல் ஊடுதலையீடுகள் சமகாலத்தில் அதிக முக்கியத் துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆசிரியர், பெற்றார், நிர்வாகிகள், சீர்மியர், உளச்சமூகப் பணியாளர், ஆற்றுப்படுத்துனர் என்ற அனைவரும் இத்துறையில் ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
மிகவும் கனதியான கருத்துக்களைத் தமிழ்மொழி வாயிலாகக் கையளிப்புச் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. விடயம் கனதியான நிலையில் அவற்றைச் சுமந்துசெல்லும் மொழியும் கனதியைத் தாங்கிய நிலையிலேதான் தொழிற்படும். 
ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை கல்வித்தர மேம்பாடு பற்றிய விவாதங்களிலே வலியுறுத்தப் பட்டு வருதல் குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த வாசிப்பு என்பது கனதியான உள்ளடக்கத்தை நோக்கிய வாசிப்பாகும். 
'விளங்கவில்லை' என்று மேலோட்டமாகக் கூறுதல் அறிவின் ஆழத்தைத் தரிசிக்காமல் தடுக்கும் எதிர்ப்புலமை நடவடிக்கை யாகும். அறிவு ஆழ்ந்து செல்லும் பொழுது அதற்குரிய சிக்கற்படும் தன்மையும் அதிகரித்துச் செல்லலை அறிவின் ஆய்வு புலப்படுத்தும்.
மேற்கூறிய நுழைவாயிற் கருத்தோடு படிக்கத் தொடங்கலாம்.

சபா.ஜெயராசா


ரீ.விக்னேஸ்வரன்
Vigneswaran, T

திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் முன்னாள்  விரிவுரையாளரும், தற்போதைய வருகை விரிவுரையாளரும் ஆவார்.  இவர் நெடுங்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் றோட்டறிக்; கழகத்தின் அங்கத்தவராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுபவர். 

 
அரசறிவியல் பாடங்களை இற்றைப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து தேடலும், வாசிப்பும் கொண்டு தனது ஆளுமையை செழுமைப்படுத்துபவர். அரசறிவியல் மாணவர்களுடனும், ஆர்வமுள்ள வாசகர்களுடனும் பல புதிய செய்திகளை, புதிய கோணத்தில் பகிர்ந்துகொள்ள துடிப்பவர். அரசியல் சார்ந்த ஆக்கங்களை படைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்.